Skip to main content

Doctor Vikatan: பேசும்போது வாயிலிருந்து கெட்ட வாடை.. அவமானம் தரும் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

Doctor Vikatan: என்  வயது 70.   நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது  எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்லை. மருத்துவரைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொண்டும்  குணமாகவில்லை. சுகர் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிடுகிறேன்.  வாய் துர்நாற்றப் பிரச்னையைக் குணப்படுத்த என்னதான் வழி?
-வாசகர் , விகடன் இணையத்திலிருந்து


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன்.

இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஏ.சங்கமேஸ்வரன்

வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில்  'ஹாலிடோசிஸ்' (Halitosis) என்று  சொல்கிறோம். வாய் துர்நாற்றம் உள்ள நோயாளிகளுக்கு, அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய சில விரிவான பரிசோதனைகள் (Investigations) தேவைப்படுகின்றன.

அந்த வகையில் நீங்கள் முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து இ.என்.டி பரிசோதனை (ENT check-up) செய்து, மூக்கு, தொண்டை அல்லது சைனஸ் பாதிப்புகள் (Sinusitis) ஏதேனும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இரைப்பை குடல்  மருத்துவரிடம்  (Gastroenterologist )  ஆலோசனை பெறுவதும் அவசியம். அவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவைப்பட்டால் வயிற்றுப் பகுதியில் உள்ள பிரச்னைகளை அறிய எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப் பரிந்துரைப்பார்.

பயாப்ஸி (Biopsy) பரிசோதனையின் மூலம் வயிற்றில் 'ஹெச். பைலோரி' (H. pylori) எனப்படும் பாக்டீரியா தொற்று ஏதேனும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். டியோடினல் பயாப்ஸி (Duodenal biopsy) செய்து பார்த்து சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் பயாப்ஸி செய்வதன் மூலம், ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதில் ஏதேனும் குறைபாடு (Malabsorption) உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

முதலில் பல் பரிசோதனை (Dental check-up) செய்து பார்த்து பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.


இந்த அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொள்வதன் மூலம்,  உங்களுக்கு வாய் துர்நாற்றம்  ஏற்படுவதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சையை  அளிக்க முடியும்.

முறையாக பற்களைத் துலக்காமல் இருந்தாலும், பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை, ஃப்ளாசிங் (Flossing)  முறையில் சுத்தம் செய்யாமல் இருந்தாலும் பாக்டீரியாக்கள் எளிதில் வளரும். அதனால் வாய் துர்நாற்றம் வரும். எனவே, வாய் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துங்கள். நீரிழிவு நோய் (Diabetes), சிறுநீரகக் கோளாறுகள் அல்லது கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சுக் காற்றில் ஒருவித வித்தியாசமான துர்நாற்றம் வீசலாம். எனவே, அது குறித்தும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...