Skip to main content

Doctor Vikatan: மூக்கில் வளர்ந்துள்ள சதை... ஆபரேஷன் இல்லாமல் கரைக்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மூக்கில் அரிப்பு, தண்ணீர் வடிவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அலர்ஜி என விட்டுவிட்டேன். பிறகு மருத்துவரைச் சந்தித்துக் கேட்டபோது என் மூக்கில் சதை வளர்ந்திருக்கிறது, தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும்  என்கிறார்கள். ஆபரேஷன் செய்யாமல் சொட்டு மருந்து மூலமே இதைக் கரைக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி.

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி

மூக்கில் தசை வளர்ச்சி என்று கேள்விப்பட்டாலே பலரும் பயந்துவிடுகிறார்கள். உண்மையில், மூக்கிற்குள் காணப்படும் எல்லாத் திசுக்களும் தசை வளர்ச்சி கிடையாது. இதை ஒரு மருத்துவரால் மட்டுமே சரியாகக் கண்டறிய முடியும்.

எல்லோரின் மூக்கிலும் இரண்டு பக்கங்களிலும் 'இன்ஃபீரியர் டர்பினேட்' (Inferior turbinate) என்ற  இயல்பான தசை அமைப்பு இருக்கும். அதையே நிறைய பேர் தசை வளர்ச்சி என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இந்த இன்ஃபீரியர் டர்பினேட் தட்பவெப்ப நிலைக்கு (Weather) தகுந்தாற்போல் தன் அளவை மாற்றிக்கொண்டே இருக்கும். குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் இது பெரிதாகும். வெப்பம் மற்றும் ஈரப்பதம்  அதிகரிக்கும்போது இது சுருங்கிவிடும்.

மூக்கில் பல்வேறு வகையான பாலிப்கள்   (Polyps)  ஏற்படுகின்றன. பாலிப் என்பது உடலின் உள் உறுப்புகளில் உள்ள சவ்வுப் படலத்தில் (Mucous membrane) வளரக்கூடிய  சிறிய, அசாதாரணமான திசு வளர்ச்சி (Tissue growth) ஆகும்.  அவற்றுள் முக்கியமான இரண்டு வகைகள் உண்டு.

காலையில் எழுந்தவுடனேயே தொடர்ந்து தும்மல் போடுவது, மூக்கில் இருந்து தண்ணீர் போல் கொட்டுவது மற்றும் மூக்கில் அரிப்பு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

முதல் வகை எத்மாய்டு பாலிப்ஸ் (Ethmoid Polyps). இதற்கு முக்கியக் காரணம் அலர்ஜி (Allergy) ஆகும். இது மூக்கின் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும். காலையில் எழுந்தவுடனேயே தொடர்ந்து தும்மல் போடுவது, மூக்கில் இருந்து தண்ணீர் போல் கொட்டுவது மற்றும் மூக்கில் அரிப்பு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னை உள்ள சிலருக்கு வாசனை அறியும் திறன் முற்றிலும் இல்லாமல் போகலாம் (Loss of smell) அல்லது குறையலாம் (Reduced sense of smell). சிலருக்குப் பெட்ரோல், காஸ் (Gas) மற்றும் சில அமிலங்கள் (Acids) போன்ற மிகவும் வீரியமிக்க வாசனைகளை (Powerful odors) மட்டுமே உணர முடியும்.

இன்னொரு வகை ஆன்ட்ரோகோயனல் பாலிப் (Antrochoanal Polyp).  இது பொதுவாகக் குழந்தைகளுக்கு வரக்கூடியது. சிறு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பெரிய அளவில் மாறும்.  இது மூக்கின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும்.

மூக்கில் பாலிப்ஸ் இருப்பதைக் கண்டறிய இரு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேசல் எண்டோஸ்கோபி (Nasal Endoscopy) முறையில் மூக்கிற்குள் சிறிய கேமரா செலுத்திப் பார்க்கப்படும். சிடி ஸ்கேன் (CT Scan) முறையில் பாலிப்ஸின் பரவல் மற்றும் தீவிரத்தைக் துல்லியமாகக் கணிக்கலாம்.

எந்தவகை பாலிப்பாக இருந்தாலும், அதற்கான முதல்கட்ட சிகிச்சை என்பது அலர்ஜியைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ மேலாண்மைதான். பாலிப்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால், அதற்குக் காரணமான அலர்ஜிக்கு  முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும்.


ஸ்டீராய்டு ஸ்பிரேக்கள் (Nasal Steroid Sprays) ஆரம்ப நிலை பாலிப்ஸை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரும்.

பாலிப்ஸ் மிகவும் தீவிரமாகி, சிலருக்கு மூக்கின் நுனி வரை கூட வளர்ந்துவிடும். இதுபோன்ற தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மாத்திரைகள் தேவைப்படலாம். இதை நீண்ட காலத்திற்கு  எடுத்துக்கொள்ள முடியாது.  சில நாள்கள் மட்டுமே கொடுத்துவிட்டு பிறகு நிறுத்திவிட வேண்டும்.

வைட்டமின் மாத்திரை
தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மாத்திரைகள் தேவைப்படலாம்.

மேற்குறிப்பிட்ட எந்த மருத்துவ சிகிச்சையாலும் (மாத்திரைகள்/ஸ்பிரேக்கள்) பாலிப்ஸ் சரியாகாத பட்சத்தில் மற்றும் நோயாளிகளுக்கு வாசனை அறியும் திறன் முற்றிலும் குறையத் தொடங்கினால், அறுவை சிகிச்சை செய்வது தான் சிறந்த வழி. அறுவை சிகிச்சை மூலம் பாலிப்ஸை முழுமையாக அகற்றிவிட்டால், நோயாளிகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அறுவை சிகிச்சை செய்த பிறகும், மருத்துவர் கூறும் அறிவுரைகளை நோயாளிகள் சரியாகப் பின்பற்றவில்லை என்றாலோ அல்லது கவனக்குறைவாக இருந்தாலோ,  பாலிப்ஸ் மீண்டும் வருவதற்கு  அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்பு (Proper Post-operative Care) மிக மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...