Skip to main content

Doctor Vikatan: ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு அதிகரித்தால் பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என் ரத்தப் பரிசோதனையில் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்படும் கிட்னி செயலிழப்பைத் தடுக்க நான் உணவில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்... பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்.

சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்
சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்

உங்களின் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக இருக்கும்போது, அது ரிவர்ஸ் செய்யக் கூடியதாகவோ (Reversible) அல்லது ரிவர்ஸ் செய்ய முடியாததாகவோ (Irreversible) இருக்கலாம்.

ஒருவேளை கிரியாட்டினின் அதிகரித்தது  ரிவர்ஸ் செய்ய முடியாதது எனப் பரிசோதனையில் தெரிய வந்தால், உங்களுக்கு சி.கே.டி (CKD - Chronic Kidney Disease) எனும் நோய் இருப்பதாகக் கண்டறியப்படும்.

சி.கே.டி என்பது சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படும் நிரந்தரமான, மெதுவான மற்றும் படிப்படியான இழப்பைக் குறிக்கும். இந்தச் சூழலில், நீங்கள் சில உணவுப்பழக்கக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அதில் முதலிடம் உப்புக் கட்டுப்பாடு (Salt Restriction). உப்பு என்பது உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகச் செயல்பாட்டை மேலும் மோசமாக்கும்.

சி.கே.டி நோயாளிகள் உணவில் புரதச்சத்தையும் (Protein Restriction) கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இது மேற்கத்திய நாடுகளின் உணவுமுறைக்குத்தான் அதிகம் பொருந்தும். ஏனெனில் அங்குதான் புரதம் சார்ந்த உணவுகள் அதிகம் சாப்பிடும் வழக்கம் இருக்கிறது.

ஆரம்பகட்ட பாதிப்பில் ஜூஸ் மற்றும் இளநீரையும், அடுத்த கட்டத்தில் பழங்கள் மற்றும் நட்ஸையும் தவிர்த்தாலே போதுமானது.

நமது இந்திய உணவு முறையில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) தான் பிரதானமானது. சாதம் அல்லது சப்பாத்தியுடன், காய்கறிகள், சிக்கன், மீன் அல்லது முட்டை போன்றவை முதன்மை உணவாக இல்லாமல் சைடிஷாகவே (Side dish) பயன்படுத்தப்படுகின்றன.

நம் உணவில் ஏற்கெனவே புரதம் குறைவாகத்தான் இருக்கிறது என்பதால், புரதத்தை மிக அதிகமாகக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, சி.கே.டி கண்டறியப்பட்ட நோயாளிகள்,  பருப்பு, பனீர், தயிர் என அனைத்தையும் விட்டுவிடத் தேவையில்லை.

உடலின் எடையில் ஒரு கிலோவிற்கு 1 கிராமுக்கும் குறைவாக புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்கெனவே அதைவிடக் குறைவாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மேலும் குறைக்க வேண்டியதில்லை.

கிரியாட்டினின் 1.8 இருக்கும்போது பழங்களை அதிகம் குறைக்க வேண்டியிருக்காது. ஆனால், கிரியாட்டினின் அளவு தொடர்ந்து அதிகரித்தால், உணவில் பொட்டாசியம்  சத்தைக்  (Potassium Restriction) குறைக்க வேண்டும்.

பழங்கள், நட்ஸ் (Nuts), இளநீர் மற்றும் பழச்சாறுகளில் பொட்டாசியம் அதிகமிருக்கும். ஆரம்பகட்ட பாதிப்பில் ஜூஸ் மற்றும் இளநீரையும், அடுத்தகட்டத்தில்  பழங்கள் மற்றும் நட்ஸையும் தவிர்த்தாலே போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...