Skip to main content

Doctor Vikatan: அம்மாவின் கால்களில் வீக்கம்... கிட்னி பிரச்னையா, இதயக் கோளாறா?

Doctor Vikatan: என் அம்மாவின் கால்கள் எப்போதும் வீங்கியே இருக்கின்றன. வீக்கமுள்ள பகுதியை அமுக்கினால் குழி விழுகிறது. கால்கள் வீங்கினால் கிட்னி அல்லது இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என்கிறார்களே, அது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

கால்களில் ஏற்படும் வீக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். அவற்றில் முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்னைகள். முக்கியமாக, இதயம் பலவீனமாக இருப்பதன் அறிகுறியாக அது இருக்கலாம்.

இதயத்தில் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இப்படி இரண்டு கால்களும் வீங்கலாம். அழுத்தும்போது குழியாகலாம். இதை 'பிட்டிங் எடிமா' (Pitting Edema) என்று சொல்கிறோம். முதல் வேலையாக உங்கள் அம்மாவுக்கு இசிஜி, எக்கோ, சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்து, இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கால் வீக்கத்துக்கான அடுத்த முக்கிய காரணம், சிறுநீரகக் கோளாறு.

சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு காரணங்கள் தவிர, குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிலருக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நிற்பதன் காரணமாகவும் கால்களில் வீக்கம் வரலாம். இதை 'டிபெண்டன்ட் எடிமா' (Dependent Edema) என்கிறோம்.

ரத்த அழுத்தம்

இந்தக் காரணத்தால் கால்கள் வீங்கும்போது, சம்பந்தப்பட்ட நபர், சிறிது நேரம் படுத்து எழுந்திருந்தால், வீக்கம் முற்றிலும் வற்றிப் போய், சாதாரணமாக மாறுவதைப் பார்க்கலாம். அந்த நாளின் இறுதியில் மீண்டும் கால்களில் வீக்கம் இருக்கலாம். ஆனாலும், இது பயப்பட வேண்டிய பிரச்னை அல்ல.

ரத்த அழுத்தம் (பிபி) உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாலும் சிலருக்கு கால்களில் வீக்கம் வரலாம். இவர்களுக்கும் இரவு தூங்கி எழுந்தால், காலையில் வீக்கம் வடிந்துவிடும். மீண்டும் அடுத்த நாள் கால்கள் வீங்கும். கல்லீரலில் ஏதேனும் பிரச்னை காரணமாக  கால்களில் வீக்கம் ஏற்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். இதையும் எளிமையான ரத்தப் பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம். எனவே, உங்கள் அம்மாவை முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பரிந்துரைக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...