Skip to main content

Doctor Vikatan: நுரைத்து வெளியேறும் சிறுநீர்... கிட்னி பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 54. சிறுநீர் கழிக்கும்போது எனக்கு அவ்வப்போது அது நுரைத்து வெளியேறுகிறது. இப்படி சிறுநீரில் நுரைத் தள்ளினால், அது சிறுநீரகப் பாதிப்பாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்

மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்
மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்

பொதுவாக சிறுநீர் கழிக்கும்போது நுரை வந்தால், பலரும் பயப்படுவார்கள். ஆனால், அப்படி நுரை வரும்போதெல்லாம் அது சிறுநீரகப் பாதிப்புதான் என்று நினைத்து பயப்படத் தேவையில்லை.

சிறுநீரில் நுரைத் தள்ள, சிறுநீரகப் பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமே காரணமாகாது. உடலில் தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம் அல்லது உடலில் நீர்ச்சத்து குறைந்து, தண்ணீர் குறைவாகக் குடித்திருந்தாலும்கூட சிறுநீர் நுரைத்து வெளியேறலாம்.

சிறுநீர் கழிக்கும்போது இதுபோன்று அடிக்கடி நுரை வருகிறது என்றால், நீங்கள்  மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது. மருத்துவர் தொடர்ச்சியான பரிசோதனைகளை (series of tests) செய்யப் பரிந்துரைப்பார். மிக முக்கியமாக நீரிழிவு நோய் (diabetes) இருக்கிறதா என்று பார்ப்பார்.
சர்க்கரை நோய் பாதிப்பினால் சிறுநீரில் புரதக்கசிவு (protein leak) ஏற்படுகிறதா என்பதையும் மருத்துவர் கவனிப்பார்.

கிட்னி

முன்பெல்லாம் சிறுநீரில் புரதக்கசிவு இருந்தால், அது மிகவும் மோசமான ஒரு நிலைமை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. தற்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது (diabetic control) மிகவும் எளிது. 

அதோடு இதற்கான சிகிச்சை முறைகளிலும் (treatment options)  நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. எனவே, சிறுநீரில் நுரை வருவதைக் கண்டு அதை மோசமான விஷயமாக நினைத்து பயப்பட வேண்டாம். அதே சமயம், அதை ஓர் எச்சரிக்கை சிக்னலாக (warning sign) மட்டும் எடுத்துக்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுக்க வேண்டுமோ, அவற்றைச் செய்தாலே போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...