Skip to main content

Doctor Vikatan: எப்போதும் 100-க்கு மேல் இருக்கும் இதயத்துடிப்பு... கவலைப்பட வேண்டிய விஷயமா?

Doctor Vikatan: எனக்கு  இதயத்துடிப்பு எப்போதும் 100-க்கு மேல்  உள்ளது. இசிஜி எடுத்துப் பார்த்தால் அதில் நார்மல் என்றே காட்டுகிறது.  பிளட் பிரஷர் 140 / 100 என உள்ளது. எனக்கு சர்க்கரைநோய் கிடையாது.  இந்நிலையிவ் இதயத்துடிப்பு குறித்து நான் கவலைப்பட வேண்டுமா?

-உமா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 90 வரை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அந்தப் பிரச்னையை  'சைனஸ் டாகிகார்டியா' (Sinus Tachycardia) எனப்படுகிறது. அதாவது இதயம் வழக்கத்தைவிட வேகமாகத் துடிக்கிறது என்று அர்த்தம்.

ஆமைகள் உலகிலேயே மிக நீண்ட காலம் வாழ்வதற்குச் சான்றாக, அவற்றின் இதயம் நிமிடத்திற்கு 16 முறை மட்டுமே துடிக்கிறது. யார் மன அமைதியோடும், மகிழ்ச்சியோடும், வாழ்க்கையில் 'போதும்' என்ற மனநிறைவோடும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இதயத்துடிப்பின் அளவு குறைவாகவே இருக்கும். அதீத உற்சாகமாக, ஊக்கத்துடன் இயங்குபவர்கள், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் (Multitasking) ஆளுமை கொண்டவர்கள் போன்றோருக்கு இதயத்துடிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. 

தைராய்டு பரிசோதனை

இவ்வாறு இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது, இதய மருத்துவரை அணுகி எக்கோ (Echo) பரிசோதனை செய்து, இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டா, இதயத் துடிப்பைச் சீராக்கும் மருந்துகளின் மூலம் (Beta Blockers) துடிப்பின் அளவை 60 முதல் 90-க்குள் பராமரிக்க மருத்துவர்கள் வழிகாட்டுவர்.

தொடர்ந்து படபடப்பு இருப்பதாகக் கூறுபவர்களுக்கு, 'ஹைப்பர்தைராய்டிசம்' (Hyperthyroidism) பாதிப்பாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம் என்பதால், தைராய்டு பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, இசிஜி (ECG) பரிசோதனை என்பது  அடிப்படை சோதனை மட்டுமே.  அதோடு நிறுத்திவிடாமல், இதயநல மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில்


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...