Skip to main content

'ராகி கூழ், கம்பு கூழ்... செய்த 1-3 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டுமா?'- டாக்டரின் அட்வைஸ் என்ன?

தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தாலும், இன்னும் வெயிலும், வெப்பமும் நீங்கவில்லை.

தமிழ்நாட்டில் எப்போதும் வெயில் சீசனையும், கூழையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட கூழ் எப்படிக் குடிப்பது நல்லது... எப்போது குடிக்கலாம் என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா.

“தமிழர் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்குத் தனி இடமுண்டு. கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அதிகமாக கூழ் தயாரிக்கப் பயன்படுத்துவர்.

இவற்றை மாவாக அரைத்து, இரவு முழுவதும் நொதிக்கவிட்டு காலையில் காய்ச்சிக் கூழாகத் தயாரிப்பார்கள். இவ்வாறு நொதிக்கவிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் எளிதாகக் கிரகிக்கப்படும்.

சித்த மருத்துவர் சங்கீதா
சித்த மருத்துவர் சங்கீதா

மேலும், வயிற்றில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்க்கும் ‘ப்ரோபயாட்டிக்’ தன்மையும் இதில் உள்ளது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதால் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது.

முதுவேனில் காலத்தில் வெயிலும், இடையிடையே மழையும் இருப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். அந்த நேரத்தில் அம்மை போன்ற வைரஸ் நோய்களும் பரவக்கூடும்.

உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் வெப்பமும் உயரும்.

இதனால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. உடல் சூட்டைக் குறைக்க அதிகமாகத் தண்ணீர் அருந்துதல், பழங்கள், மோர், இளநீர், கூழ் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

பழங்காலத்தில் மக்கள் அதிக தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். உடல் சோர்வு மற்றும் வெப்பத்தைக் குறைக்க சாலையோரங்களில் பந்தல் அமைத்து இலவசமாக கூழ் வழங்கும் பழக்கமும் இருந்தது.

கேழ்வரகில் அரிசியைவிட பல மடங்கு கால்சியம் உள்ளது. கம்பில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து காணப்படும்.

இது மூலநோய்க்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கும் எளிதில் செரிக்கும் உணவாகும். ஆனால், தோல் அரிப்பு அல்லது சிரங்கு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கம்பை அளவோடு சாப்பிடுவது நல்லது.

கம்மங் கூழ்
கம்மங் கூழ்

அதேபோல், அதிகமாகப் புளித்த கூழ் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், 3 முதல் 12 மணி நேரம் வரை ஊறவைத்து நொதித்த கூழ்தான் உடலுக்கு நல்லது. முறையாக நொதிக்காத கூழை அருந்தினால் வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கூழைக் காய்ச்சிய பிறகு 1 முதல் 3 மணி நேரத்துக்குள் அருந்துவது நல்லது. மோர் சேர்க்காமல் கட்டியாக உருட்டி வைத்தால், அதை ஒரு நாள் வரை பாதுகாத்து பின்னர் கரைத்துச் சாப்பிடலாம்.

சிலருக்கு முதன்முறையாக கூழ் குடிக்கும்போது உடல் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர்க்கலாம். சிறு குழந்தைகளுக்கு கூழின் சுவை உடனே பிடிக்காமல் இருக்கலாம். சேர்ப்பது சிரமமாக இருக்கலாம். பொதுவாக 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...