Skip to main content

Doctor Vikatan: உடல்சோர்வு, உடல் வலி... வைட்டமின் டி மாத்திரை எடுத்தால் சரியாகுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த ஒரு வருடமாக கடுமையான உடல் வலியும், எப்போதும் உடல் சோர்வும் இருப்பதாக உணர்கிறேன்.

வைட்டமின் டி பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் என்றும், அந்த சப்ளிமென்ட் எடுத்தால் சரியாகி விடும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இது உண்மையா... இந்தப் பிரச்னைக்கு வேறு தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

சோர்வுக்கும் உடல் வலிக்கும் வைட்டமின் டி (Vitamin D) குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக எத்தனை பேருக்கு ரத்தப் பரிசோதனை (Blood test) செய்து பார்த்தாலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் டி 3 அளவு 10-லிருந்து 20-க்குள்ளாகத்தான் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அது 25-க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. மாத்திரை சாப்பிடுபவர்களுக்கே 35-லிருந்து 40 வரைதான் இருக்கிறது. எனவே, வைட்டமின் டி குறைபாடும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.

நாள்பட்ட உடல் வலி மற்றும் சோர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கக்கூடும். மனது உற்சாகமில்லாமல் இருப்பதுகூட  முக்கிய காரணமாகும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது (Physical inactivity) இன்னொரு காரணம். தமிழ்நாட்டில் பொதுவாக மாவுச்சத்து (Carbohydrates) நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. 

போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, 60 கிலோ எடை உள்ளவர்கள் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்காமல் போகும்போது ஏற்படும்  புரதச்சத்துக் குறைபாட்டினாலும் உடல் வலி வரலாம்.

வெறும் சோறு, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், இட்லிப்பொடி என்றே சாப்பிடுவதால்  நம்முடைய உணவில் மற்ற வைட்டமின்கள் எதுவும் பெரிய அளவில் இருப்பதில்லை. அதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் (Dry fruits) மற்றும் பருப்பு வகைகள் (Nuts) போன்றவற்றைச் சாப்பிடாததால் மல்டி வைட்டமின் குறைபாடுகள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அசைவ உணவு (Non-veg) சாப்பிடுபவர்களுக்குக் கூட ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், வைட்டமின் பி 12 அளவு 112 அல்லது 113 என்ற அளவில்தான் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், அது 160 அல்லது 180-க்கு மேல் இருந்தால் நல்லது. உடலில் பி-காம்ப்ளெக்ஸ் (B-Complex) சத்து இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வெறும் சோறு, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், இட்லிப்பொடி என்றே சாப்பிடுவதால் நம்முடைய உணவில் மற்ற வைட்டமின்கள் எதுவும் பெரிய அளவில் இருப்பதில்லை.

60 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தச்சோகை (Anemia) உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் (Hemoglobin) அளவு குறைவாக இருப்பதும்  உடல் வலி மற்றும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர, மற்ற உடலுறுப்புகளின் செயல்பாடுகளையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஈரல், சிறுநீரகங்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்தை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் ஒரு காரணம். வியர்வையின் வழியாக உடலில் உள்ள உப்பு வெளியேறிவிடுவதால், உடலில் போதிய உப்புச்சத்து இல்லாமல் போவதும் இந்த வெயில் காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் கை, கால் வலிக்குக் காரணமாக இருக்கலாம். 

எனவே, நாம் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  சமச்சீர் உணவு (Balanced diet) எடுத்துக் கொள்கிறீர்களா என்றும் பாருங்கள். இப்படி எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் உங்கள் சோர்வு மற்றும் உடல் வலிக்கான காரணம் அறிந்து சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...