Skip to main content

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்' (Smithsonian's National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்' (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்.

புடவை
புடவை

2013 டிசம்பரில், விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலக்கி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்திற்கு மிக முக்கியமான பணி நடைபெற்றது. அந்தச் சவாலான நாளில், நந்தினி அவர்கள் சிவப்பு, நீல நிறம் கலந்த பட்டுப்புடவையை அணிந்திருந்தார். செப்டம்பர் 24, 2014 அன்று மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்து சரித்திரம் படைத்தது.

மங்கள்யான் வெற்றி பெற்ற போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பாரம்பர்யப் புடவை அணிந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகள் (நந்தினி ஹரிநாத், ரிது கரிதால், அனுராதா டி.கே போன்றோர்) ஆரத்தழுவித் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடிய புகைப்படம் உலகெங்கும் வைரலானது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் விண்வெளி வரலாற்று காப்பாளர் மாட் ஷிண்டெல் மிகவும் ஈர்க்கப்பட்டார். இந்தியாவின் இந்த 'ராக்கெட் பெண்களின்' (Rocket Women) கதையை உலகிற்குச் சொல்ல வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

நந்தினி ஹரிநாத்
நந்தினி ஹரிநாத்

2020ம் ஆண்டில், நந்தினி ஹரிநாத்தை மாட் ஷிண்டெல் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். இந்தியாவின் மங்கள்யான் வெற்றியையும், அதில் பெண்களின் பங்களிப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் ஏதாவது ஒரு பொருளை அருங்காட்சியகத்திற்கு வழங்க முடியுமா என அவர் கேட்டார். அப்போதுதான், விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு விலகிய அந்த மிக முக்கியமான நாளில் தான் அணிந்திருந்த அந்தச் சிவப்பு-நீல நிறப் பட்டுப் புடவையை வழங்க நந்தினி சம்மதித்தார்.

புடவையும் அதற்குப் பொருத்தமான மேலாடையும் வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றடைந்தது. ஆனால், அமெரிக்கர்களுக்கு அதைக் கட்டத் தெரியவில்லை. எனவே அங்குள்ள ஆடை பராமரிப்பாளரான பெத் நைட் என்பவர், ஒரு பொம்மைக்கு அந்தப் புடவையை எப்படிச் சரியாகக் கட்டுவது என்பதை யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு நேர்த்தியாக அணிவித்துள்ளார்.

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் `கோள்களுக்கிடையேயான அறிவியல் சேகரிப்பில்' இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பொருள் இந்தப் புடவைதான். அதேபோல அந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முதல் புடவையும் இதுவே.

நந்தினி ஹரிநாத்
நந்தினி ஹரிநாத்

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்ணான சாலி ரைடு (Sally Ride) 1983-ல் அணிந்திருந்த புகழ் பெற்ற நீல நிற டி-ஷர்ட்டுக்கு அருகிலேயே நந்தினியின் இந்தப் புடவை பெருமையுடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பப் பெருமையையும், நம் பெண்களின் முன்னேற்றத்தையும் பறைசாற்றும் ஒரு தேசிய அடையாளமாக இந்தப் பட்டுப் புடவை இன்று அமெரிக்காவில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஒரு பெண் தனது தனித்துவமான அடையாளத்தை இழக்காமலேயே உலகத்தரம் வாய்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...