Skip to main content

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்... நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெப்பத்தைத் தணிக்க என்ன செய்தாலும் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில் எண்ணெய்க் குளியல் உதவுமா... குறிப்பாக, நல்லெண்ணெய் வைத்துக் குளிக்கலாமா.... நல்லெண்ணெயை அப்படியே தலையில் தேய்த்துக் குளிப்பது சரியா அல்லது சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

நல்லெண்ணெயைப் பயன்படுத்தி எண்ணெய்க் குளியல் (நெய் குளியல்) எடுக்கும்போது, அதனை கண்டிப்பாகச் சூடுபடுத்தித்தான் பயன்படுத்த வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும்கூட, எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.

குளிர் காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயை லேசாகச் சூடாக்கிப் பயன்படுத்துவது மிக அவசியம். ஏனெனில் அது தரும் குளிர்ச்சியை ஈடுகட்ட நிச்சயம் அப்படிச் செய்தாக வேண்டும். எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது, எண்ணெயுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அதுதான் முறையான எண்ணெய்க் குளியலுக்கான அடிப்படையும்கூட.

புதிதாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தொடங்குபவர்கள், அப்படியே எண்ணெயைத் தேய்த்துக் குளித்தால் சளிப் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் எண்ணெயைச் சூடுபடுத்திப் பயன்படுத்துமாறு சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

எண்ணெய் குளியல்

எண்ணெயைச் சூடுபடுத்தித் தேய்ப்பது உடலுக்கு இதத்தைத் தரும். உச்சந்தலையில் எண்ணெய் தேய்க்கும்போது, அந்தச் சூடு உடலின் வர்ம புள்ளிகளைத் தூண்டும் என்ற சித்த மருத்துவக் கருத்தின் அடிப்படையில் இப்படிச் சொல்லப்படுகிறது.

அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு அரை மணி நேர இடைவெளி விட்டு நீராடுவதே எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதற்கான சரியான வழிமுறை. அதிகாலையில் முடியவில்லை எனில் காலை ஆறு மணி வாக்கில் எண்ணெய்க் குளியலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...