Skip to main content

Doctor Vikatan: வெற்றிலையில் கற்பூரம் வைத்துச் சாப்பிட்டால், பீரியட்ஸ் தள்ளிப்போகுமா?

Doctor Vikatan: எங்களுடையது கூட்டுக்குடும்பம். அதனால் அடிக்கடி ஏதேனும் பூஜை, விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும்.

முக்கியமான தினங்களின் போது பீரியட்ஸ் வந்துவிடாமலிருக்க அவ்வப்போது மாத்திரை போட்டுக்கொள்வது வழக்கம். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் படித்தேன்.

சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீர் குடிப்பது, சிறிது கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவது, இஞ்சிச்சாறுடன் வெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்வது எல்லாம் பீரியட்ஸை இயற்கையான முறையில் தள்ளிப்போடும் என்று சொல்லியிருந்தார்கள்.

அது எந்த அளவுக்கு உண்மை... அதேபோல பீரியட்ஸைச் சீக்கிரமே வரவழைக்க இயற்கையான வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

இன்று சுகாதார வசதிகள் பெருகிவிட்டன. சானிட்டரி நாப்கின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையிலும், அந்தக் காலத்துப் பழைய நடைமுறைகளைப் பின்பற்ற நினைப்பது தேவையற்றது. அப்படிப் பின்பற்றுவது சாத்தியமும் இல்லை. 

உங்களுக்கு முறையான மாதவிடாய் சுழற்சி (Regular Periods) அதாவது 28 முதல் 35 நாள்கள் இருந்தால் மட்டுமே பீரியட்ஸைத் தள்ளிப்போடும் திட்டமிடல் பலன் தரும். முறைதவறிய சுழற்சி இருந்தால் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்க வேண்டாம். 

மாதவிடாய் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சில விஷயங்களைச் செய்யத் தொடங்க வேண்டும். அந்த வகையில் சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்துக் குடிப்பதும், பொட்டுக்கடலை சாப்பிடுவதும் உடல் சூட்டைத் தணித்து மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும். இதை நீங்கள் பீரியட்ஸ் வருவதற்கு ஒரு நாள் முன்பு செய்தால் பலன் கிடைக்காது. ஒருவாரம் முன்பே செய்யத் தொடங்கினால் ஒருநாளோ, இரண்டு நாள்களோ பீரியட்ஸ் தள்ளிப்போகும், அவ்வளவுதான்.

நீங்கள் கேட்டுள்ளபடி சிறிது கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவதெல்லாம் சரியான விஷயமல்ல. மருத்துவர்கள் யாரும் அதையெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள்.

அதேபோல இஞ்சிச் சாற்றுடன் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால்,  இஞ்சிச் சாறு சிலருக்கு வயிற்று எரிச்சலையும், வயிறு, குடல் தொடர்பான உபாதைகளையும் தரக்கூடும்.

வாழைப்பூ
வாழைப்பூ

வாழைப்பூவிலிருந்து இரண்டு மடல்களை எடுத்துக்கொள்ளவும். அந்தப் பூக்களின் நடுவில் உள்ள நரம்புகளை நீக்கிவிடவும். அந்தப் பூக்களுடன், சிறிது பொட்டுக்கடலை மாவும் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதில் சிறிது மோர் அல்லது தண்ணீர் கலந்து காலை, மாலை என இருவேளை குடித்து வரலாம்.

இது பீரியட்ஸை இயற்கையாகத் தள்ளிப்போட உதவும். மாதவிடாய் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே எள் உருண்டை சாப்பிட்டு வந்தால், பீரியட்ஸ் முன்கூட்டியே வரும். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டைச் சீராக்கி பீரியட்ஸ் வரத் தூண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எப்போதாவது ஒருமுறை இயற்கை வழியில் பீரியட்ஸை தள்ளிப்போட முயல்வது தவறில்லை. ஆனால், அடிக்கடி மாதவிடாய் சுழற்சியை மாற்றியமைப்பது உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து, முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு (Irregular Periods) வழிவகுத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் வீட்டு விசேஷங்களை பீரியட்ஸ் வரும் நாளுக்கேற்ப மாற்றித் திட்டமிடப் பாருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...