Skip to main content

Doctor Vikatan: உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்?

Doctor Vikatan: தொடர்ச்சியாக அவல் உணவுகளைச் சாப்பிட்டு பல கிலோ எடை குறைத்ததாக சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலம் தகவல் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நானும் பின்பற்றினேன். எனக்கு எடையும் குறையவில்லை, ரத்தச் சர்க்கரை அளவும் கூடிவிட்டது. அவல் சாப்பிட்டால் எடை குறையாது, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று சிலர் சொல்வது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

அவல் சாப்பிட்டாலும் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) மற்றும் உடல் எடை கூடும் என்பது உண்மைதான். சாதாரண அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அல்லது அவல் ஓரளவிற்குச் சிறந்தது என்றாலும், இதிலும் குறிப்பிடத்தக்க அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.

அவல் என்பது கார்போஹைட்ரேட் வகை உணவே தவிர, புரதச்சத்து (Protein) நிறைந்த உணவு கிடையாது. எனவே, இதனை அளவுக்கு அதிகமாக உண்பது உடல் எடை மற்றும் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும். குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவலில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவு என்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்ல உணவாக அமைகிறது.
இட்லி, தோசை போன்ற உணவுகள் அரிசியினால் செய்யப்பட்டு புளிக்க வைக்கப்படுவதால் உடலில் எளிதாக உறிஞ்சப்பட்டு சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். ஆனால், அவலில் நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால் அது செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இதனால் சர்க்கரை அளவு திடீரென உயராது.

அவல் உணவை உட்கொள்ளும்போது அதனுடன் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சமைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சாதாரண அரிசி அவலைவிட, சிறுதானியங்களில் செய்யப்படும் அவல் ஆரோக்கியத்திற்கு இன்னும் சிறந்தது. செரிமானமாகும் நேரத்தைப் பொறுத்தவரை சாதத்தைவிட அவல் சிறந்ததாக இருந்தாலும், கலோரி அளவில் இரண்டும் கிட்டத்தட்ட சமமானவைதான்.

எடைக்குறைப்பு விஷயத்தில் தனக்கு உதவியதாக ஆளாளுக்குச் சொல்கிற விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் உணவு, இன்னொருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எடையைக் குறைக்க வேண்டும் என்றால் முறைப்படி மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகி, சரியான வழிகளைத் தெரிந்துகொண்டு பின்பற்றுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...