Skip to main content

இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இளைஞர்கள் மத்தியில் முதுகு வலி பிரச்னை குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்களுக்கு ஏற்படும் முதுகு வலி அதற்கான காரணங்கள் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன்.

back pain!

"பொதுவாகவே முதுகுவலிப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். குறிப்பாக, 18 முதல் 38 வயது வரையிலானவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. 2020 முதல் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்றின் தாக்கம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பை பயன்படுத்துவது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது போன்றவையும் ஆகியவை இளைஞர்களுக்கும் முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். இளைஞர்களுக்கு ஏற்படும் தசை மற்றும் மூட்டுப் பிரச்னைகளில், 76 சதவிகிதம் முதுகு வலிதான் உள்ளது.

முதுகு வலி

கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பின் கீழ் பகுதி வரையுள்ள முதுகெலும்பில் ஏற்படும் அசௌகரியம்தான் முதுகு வலி. தசை நார் சுளுக்கு, முதுகெலும்பு பிரச்னை, உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகவும் முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கு படுத்து ஓய்வெடுப்பது சிறந்த தீர்வாகும் என்று நம்பப்படுகிறது. நீண்ட நேரம் படுத்த நிலையில் இருப்பது தசைகளைப் பலவீனப்படுத்தும், மூட்டுகளை விரைப்பாக்கும். இதனால் வலி அதிகரித்து, குணமடைவதையும் தாமதப்படுத்தும்.

எடை தூக்கினால் முதுகு வலி வருமா?

அதேபோல உடற்பயிற்சி செய்தால் முதுகு வலி தீவிரமாகும் என்றும் நம்பப்படுகிறது. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சியை, நிபுணர்கள் வழிகாட்டுதலின்படி செய்தால், முதுகுவலி குணமாக வாய்ப்புள்ளது. ஆலோசனையின்றி சுயமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும். அதிக எடையைத் தூக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதில்லை. முறையற்ற முறையில் தூக்குவது முதுகுவலியை உண்டாக்கலாம். எடை அதிகமான பொருள்களை சரியான முறையில் தூக்குவதன் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.

முடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம்.டி.எஸ். சசிதரன்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நிற்க வேண்டும். ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை தசை இறுக்கத்தைப் போக்க ஸ்ட்ரெச்சஸ் செய்யலாம். சரிவிகித உணவு, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது ஆகியவையும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை செய்யும்போது, சரியான உயரத்தில் மேஜை, நாற்காலி இருக்க வேண்டும். செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது கழுத்தை நீண்டநேரம் முன்னோக்கி வளைப்பதையும், குனிந்த நிலையில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் திரையை கண் மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். உறங்குவதற்கு மிகவும் மென்மையான மற்றும் மிகவும் கடினமான மெத்தைகளைத் தவிர்க்க வேண்டும்.

தலையணை மீது தலை வைக்கும்போது, கழுத்தை அதிக உயரத்தில் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தசை இறுக்கத்துக்கு வழிவகுக்கும். முதுகு வலியையும் அதிகரிக்கும். எனவே, மன அழுத்தமின்றிப் பணிபுரிய வேண்டும்.

Stressed woman at workplace (Representational image)

அதேபோல, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்யலாம். இவை உடல் திறனை மேம்படுத்துவதுடன், முகுதுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். நான்கு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான முதுகு வலி, வலி பரவும் உணர்வு, உணர்வே இல்லாமல் போவது, நிற்பது, நடப்பதற்கு கூட சிரமம் ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்கிறார் மருத்துவர் சசிதரன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...