Skip to main content

Nala dental: அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய இடமாக மாறி வரும் மதுரை

உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான். 

 Nala dental hospital
Nala dental hospital

டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், "மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான ரெட்டினா நோய்கள் போன்ற சிக்கலான கண் பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மருத்துவர்களின் பரிந்துரை

ஒரு சில நோயாளிகள் முன்பு சிகிச்சை பெற்றவர்களின் பரிந்துரையால், தங்கள் நாட்டில் உள்ள கண் மருத்துவர்களின் பரிந்துரையால் இங்கு வருகிறார்கள். 

அரவிந்த் மருத்துவமனை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. நைஜீரியாவில் உள்ள கண் மருத்துவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் அரவிந்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை

வெளிநாட்டு நோயாளிகளுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. விமானப் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஒப்பிடுகையில், சிகிச்சை செலவு மிகவும் குறைவாக உள்ளது.

சில நாடுகளில் அரசே தங்கள் குடிமக்களுக்கு அரவிந்தில் சிகிச்சை பெற பயணச் செலவையும் சிகிச்சை செலவையும் ஏற்றுக் கொள்கிறது. பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சேவைகளுக்கு அவர்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள்" என்றார். 

"டென்டல் இம்பிளான்ட் சிகிச்சைக்காக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான நோயாளிகள் நாலா டெண்டல் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளுடன் ஒருவரோ இருவரோ உடன் வந்து, சுமார் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்கிறார்கள். பல் சிகிச்சைக்கான செலவு இங்கு குறைவாக இருப்பதே வெளிநாட்டவர்களின் வருகைக்கு முக்கிய காரணம்" என்கிறார் மருத்துவர் ஜே. கண்ணா பெருமான். 

டிராவல் கிளப், மதுரையின் நிறுவனர் மற்றும் ஹோட்டல் ஃபார்ச்சூன் பாண்டியன் இயக்குனரான ஜி. வாசுதேவன் கூறுகையில், "மதுரையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன.

அதற்கு முதன்மையாக, நேரடி விமான சேவை அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடி விமானங்கள் தொடங்கப்பட வேண்டும். இது நோயாளிகளின் பயண நேரத்தை எளிதாக்கும்.

 மேலும், வெளிநாடுகளில் மதுரையை ஒரு தனி மருத்துவ நகரமாக அறிமுகப்படுத்த, ரோடு ஷோ மூலம் விளம்பர படுத்த வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மதுரையின் தூதர்களாக செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்களின் உலகளாவிய தொடர்புகள் மதுரைக்கு பெரிய ஆதரவாக அமையும். அரசு, மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மதுரை ஒரு சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக நிச்சயம் உருவாகும்" என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...