Skip to main content

Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?

Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

நெயில் ஆர்ட், ஜெல் நெயில் பாலிஷ் போல இன்று பலவிதமான நக அலங்காரங்கள் டிரெண்டாக உள்ளன. சராசரியாக 10 பேரில் 8 பேருக்கு இதுபோன்று நகங்களை அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் உள்ளதையும் பார்க்கிறோம்.

அதிலும் பலர் ஜெல் நெயில் பாலிஷை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், சாதாரணமான நெயில் பாலிஷ் விரைவில் உரிந்து வந்துவிடும். மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஜெல் நெயில் பாலிஷ், மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். இதனால்தான் பலருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் பிடித்தமானதாக உள்ளது.

இன்று அதிகமானோர் நெயில் ஆர்ட்டை விரும்பி செய்துகொள்வதால், அதை முற்றிலும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், முடிந்தவரை இதில் பாதுகாப்பு நடவடிக்கையாக சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.

நகங்களின் மீது பல அடுக்குகளாக இந்த அலங்காரங்கள் செய்யப்படும். பிறகு மின் விளக்கின் கீழ் காயவைத்து, அந்த டிசைனை திடமானதாக மாற்ற வேண்டும். இதற்காக புற ஊதாக்கதிர் விளக்குகளை பார்லர்களில் பயன்படுத்துவார்கள்.

அப்போதுதான் அந்த ஆர்ட்டானது நீண்ட நாள்களுக்கு நகங்களில் அப்படியே இருக்கும். இந்த முறை நகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்தால் புற்றுநோய் வரை வரும் ஆபத்து இருக்கிறது.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, அடிக்கடி நெயில் ஆர்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்துக்குப் பதிலாக, எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்துகிற பார்லர்களில் நக அலங்காரம் செய்துகொள்ளலாம். அலங்காரத்துக்கான பாலிஷ் தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

நெயில் ஆர்ட்
நெயில் ஆர்ட்

தினசரி வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளாமல் ஏதாவது பண்டிகைகள், சுப நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றின்போது நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம். நெயில் ஆர்ட் செய்துகொள்வதைப் போலவே, அதை முறையாக அகற்றுவதும் முக்கியம்.

நகமானது சேதமடைவது, காகிதம் போல கிழிவது போன்ற சிக்கல்களும் இருக்கும். அதனால் நெயில் ஆர்ட் செய்துகொண்டவர்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை, குறிப்பாக... புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம்.

பயோட்டின் ஊட்டச்சத்து கூந்தலுக்கு உதவாது. ஆனால், நகங்களுக்குப் பெரிய ஆதாரமாக அமையும்.
அதேபோல நெயில் ஆர்ட் செய்யும்போது நகக்கண்ணான கியூட்டிக்கிளைக் குத்தி, குடைந்து சேதப்படுத்திவிடக் கூடாது.

நகத்தின் பாதுகாப்புக்காகவே நகக்கண்கள் இருக்கின்றன. அதை வடிவமைக்கிறேன் என்று பிரச்னையை உருவாக்கிவிடக் கூடாது. இந்த கியூட்டிக்கிளை சேதப்படுத்துவதால்தான் பூஞ்சைத்தொற்று உருவாகிறது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், கவனமாக நெயில் ஆர்ட் செய்துகொண்டால் நகங்கள் அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...