Skip to main content

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்

''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆண் குழந்தைகளுக்கோ இப்படிச் சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார்.

Foods for Teenage boys
Foods for Teenage boys

அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் பருவத்தில், ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் அம்மாக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் அவர்கள் திடீரென்று அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவார்கள்.

அடிக்கடி `பசி, பசி' எனச் சாப்பிடக் கேட்பார்கள். அவர்கள் பருவமடையும் வளர்ச்சியை எட்டுவதே இதற்குக் காரணம்.

இந்த மாற்றங்கள் 12 வயதில் தொடங்கி 18 வயதுவரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்கள் தோன்றும்.

12 வயதில் சுமார் 40 முதல் 50 கிலோ எடையில் இருக்கும் ஆண் குழந்தைகள், அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 கிலோ எடையை அடைந்திருப்பார்கள்.

உயரத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவார்கள். ஐந்து அடியில் இருந்து சுமார் ஆறு அடி உயரத்தை எட்டுவார்கள். இந்த உடல் வளர்ச்சிகளுடன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும்.

Foods for teen age boys
Foods for teen age boys

எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்துக்கு, இந்த வளர்ச்சிப் பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். சரியான ஊட்டச்சத்து கிடைக்கத் தவறினால், அவர்களின் முழுமையான வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இந்தப் பருவத்தில் சத்துகள் மிகுந்த உணவுகளைக் கொடுக்கத் தவறினால் பின்னாளில் மலட்டுத்தன்மைகூட ஏற்படும்.

பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க 2,500 கலோரி உணவு தேவைப்படும். அதுவே விளையாட்டில் அதிகம் பங்கேற்கும் ஆண் குழந்தைகளுக்கு 3,000 - 4,000 கலோரி உணவு தேவைப்படும்.

மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல் என அனைத்துச் சத்துகளும் சரிவிகித அளவில் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுதானியங்கள்
சிறுதானியங்கள்

ஆண் குழந்தைக்குத் தேவைப்படும் எனர்ஜியை அளிக்கும் மாவுச்சத்து, அனைத்து வகை தானியங்களிலும் கிடைக்கும். அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கும் சாதம், ரொட்டி, அடை, தோசை, உப்புமா ஆகிய மாவுச்சத்து உணவுகளை, தினமும் மூன்று அல்லது நான்கு வேளைகளுக்குக் கொடுக்கலாம்.

பதின்பருவ ஆண் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கும் ஹார்மோன் தேவைகளுக்கும், நல்ல கொழுப்புச்சத்தை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய், பால், தயிர் மற்றும் அசைவ உணவுகளிலும் கொழுப்புச் சத்து உள்ளது. இவற்றைக் குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

Fish food for teen age boys
Fish food for teen age boys

உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் முக்கியம். பதின்பருவ ஆண் குழந்தையின் எடை கூடவும், எலும்பு, தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியம். இது பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், சீஸ் (பாலாடைக்கட்டி), முட்டை,  மீன், பிற அசைவ உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் கிடைக்கிறது.

தினமும் ஒரு கப் சுண்டல், ஒரு கப் பருப்பு, 300 - 500 மில்லி பால் அல்லது தயிர், இவற்றுடன் முட்டை அல்லது மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவம் எனில், பருப்பின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.

ஆண் குழந்தையின் வளர்ச்சியை முழுமையடையச் செய்ய, பலவிதமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அவசியம். முக்கியமாக கால்சியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து. காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகளிலிருந்து இந்தச் சத்துகளைப் பெறலாம்.

கால்சியம் அதிகமாகக் கிடைக்க பால், தயிர், பருப்பு வகைகள், கொட்டை வகைகளை அதிகம் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்துக்கு கீரை, கொட்டை வகைகள், முட்டை மற்றும் அசைவ உணவுகளைக் கொடுக்கலாம்.

* ஆண் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆரோக்கிய உணவின் அவசியம் குறித்து அறியாமல் இருக்கும் அம்மாக்கள், `நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் சாப்பிடு', `பிரெட் வாங்கிட்டு வந்து சாப்பிடு' என்று அவர்களின் பசிக்கு நல்லுணவு கொடுப்பதிலிருந்து தவறுகிறார்கள்.

இதனால், உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. மேலும், தேவையற்ற உப்பு, கொழுப்பு உடலில் சேரும். உடல்பருமன் முதல் பலவிதமான பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள்.

ஆண் குழந்தைகளுக்கு வளர்ச்சியில் இருந்து தன்னம்பிக்கை வரை இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டியது அவசியம்.

* பெரும்பாலான சிறுவர்கள் காய்கறி, பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதனால் வைட்டமின், மினரல் சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். உடல்பருமன் அடைவார்கள். சோர்வாகக் காணப்படுவார்கள். கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றலும் பாதிக்கப்படும். எனவே, காய்கறிகளும் பழங்களும் மிகவும் அவசியம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...