Skip to main content

``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!

''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது.

நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தில் மூன்று நாள்கூட சாப்பிடலாம். பீர்க்கங்காயின் தோலில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதையும் தவிர்க்க வேண்டாம். அது துவர்ப்புத் தன்மை நிறைந்தது என்பதால், சமையலில் அப்படியே பயன்படுத்த முடியாது. துவையலாக செய்து சாப்பிடலாம்'' என்கிற டயட்டீஷியன் அம்பிகா சேகர், பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களையும், அதன் தோலை எப்படி துவையல் செய்வது என்பதையும் விளக்குகிறார்.

பீர்க்கங்காய்
பீர்க்கங்காய்

• பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட மிகவும் நல்லது. தவிர, உடலில் தாது உப்புக்களின் சமநிலையின்மை ஏற்படாமல் தடுத்து, உடலை தேவையான நீர்ச்சத்துடன் பராமரிக்கும்.

• இதிலுள்ள வைட்டமின் பி, சி செரிமானத்தை எளிதாக்கும்.

• குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பீர்க்கங்காய் மிகவும் நல்லது. காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, பருப்புடன் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம்.

• பீர்க்கங்காயின் சுவைக்காக சிலர் அதை ஊறுகாயாகச் செய்து சாப்பிடுவதுண்டு. ஊறுகாயாகச் சாப்பிடும்போது சத்துகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும்கூட, கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், அவர்களும் பீர்க்கங்காய்த் தோல் துவையலைச் சாப்பிடலாம்.

பீர்க்கங்காயும் அதன் தோலும்; மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!
பீர்க்கங்காயும் அதன் தோலும்; மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!

• சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக இது செயல்படும் என்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் பாதித்தவர்களும், அதிலிருந்து மீண்டுகொண்டிருப்பவர்களும்கூடத் தயக்கமின்றி இதைச் சாப்பிடலாம்.

• கர்ப்ப காலத்தில் வாந்தி உணர்வு ஏற்படுபவர்கள், பீர்க்கங்காயைத் தவிர்ப்பது நல்லது.

• சர்க்கரைநோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு, உணவில் உப்பு குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ எனப் பழகியவர்களுக்கு, உப்பு குறைவாகச் சாப்பிடுவது அதிக சிரமத்தைக் கொடுக்கும். மனதளவில், முழுமையாகச் சாப்பிட்ட திருப்தியே அவர்களுக்கு ஏற்படாது.

ஆனால், பீர்க்கங்காய்த் தோல் ரெசிபியில் இந்தப் பிரச்னை கிடையாது. காரணம், பீர்க்கங்காயின் தோல் பகுதி உப்புச்சுவை கொண்டது. அதனால், ரெசிபியில் உப்பு குறைவாகச் சேர்த்தாலும் மாற்றம் எதுவும் தெரியாது.

பீர்க்கங்காய்த் தோல் துவையல்
பீர்க்கங்காய்த் தோல் துவையல்

தேவையானவை:

பீர்க்கங்காய்த் தோல்: ஒரு கப்

உளுத்தம்பருப்பு: ஒரு டேபிள்ஸ்பூன்

தனியா: அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்: 4

தேங்காய்த்துருவல்: ஒரு டீஸ்பூன்

புளி: எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை மற்றும் உப்பு : தேவையான அளவு

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, பீர்க்கங்காய்த் தோல் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கும்போதே, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

தோல் நன்கு வதங்கியதும் புளி, துருவிய தேங்காயைச் சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும்போது, குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தவும். பீர்க்கங்காய் தோல் துவையலில், பீர்க்கங்காயின் தோல் பகுதியை மட்டுமே வதக்குவதால், அதிலுள்ள அனைத்துச் சத்துகளும் அழியாமல் முழுமையாகக் கிடைக்கும்.

பீர்க்கங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து வாங்குங்கள். அடர் பச்சை நிறத்திலுள்ள காயை வாங்குவது சிறப்பு.

சில காய்களில், அடிப்பகுதி மட்டும் அடர்த்தியாக இருக்கும். அப்படியில்லாமல், காய் முழுவதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.

காயின் மேலுள்ள நரம்புகளின் நிறத்தைப் பார்த்து வாங்க வேண்டும். அது வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தாலோ, காயின் காம்புப் பகுதி வறண்டிருந்தாலோ அந்தக் காய் முற்றல் என்று அர்த்தம். அதை வாங்க வேண்டாம்.

பீர்க்கங்காய்த் தோலைச் சுத்தம் செய்யும்போது, கடினமான நரம்புள்ள தோல் பகுதிகளை அப்புறப்படுத்தவும். தோல் பகுதியைக் கழுவிய பிறகே சமையலுக்குப் பயன்படுத்தவும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...