Skip to main content

Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும்

செயற்கை நுண்ணறிவு (AI), இதுதான் இன்றைய உலகின் அதி பிரபலமான தொழில்நுட்பமே. கல்வி கற்பிப்பது தொடங்கி, உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை இதன் வளர்ச்சி அளப்பரியது. மனிதர்களின் வேலையை சுலபமாக மாற்றுகிறது என்ற பிளஸ் பாயிண்ட் இருந்தாலும், மனிதர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக அமைகிறது என்ற எதிர்மறை கருத்துக்களும் AI தொழில்நுட்பத்தை பின்தொடரவே செய்கிறது.

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த MIT நிறுவனம் நடத்திய ஆய்வில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் பெறுபவர்களுக்கு Cognitive Debt போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

cognitive debt
cognitive debt

Cognitive Debt பற்றிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன என்பதை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாஷ் பிரபாகரன்.

’’AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைகளை மிகவும் எளிதாக்கக்கூடிய ஒரு பயனுள்ள தொழில்நுட்பம்தான். இந்த ஆராய்ச்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களைவிட, AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு Cognitive debt பிரச்னை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

மூளை
மூளை

ஒரு தகவல் அல்லது விஷயத்தைப்பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாமல், ஏதேனும் ஒரு விடை கிடைத்தால் போதும் என்கிற மனப்பான்மை.. அந்த விடை ஏன் வந்தது; எப்படி வந்தது; அது சரியா என்பதை ஆராயாத அல்லது யோசிக்காத நிலையைத்தான் Cognitive debt என்போம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் மூளைக்கு வேலை கொடுத்து யோசிப்பதை நிறுத்திவிட்டு, AI தொழில்நுட்பத்தையே முழுவதுமாக நம்பி இருப்பதுதான் இந்த Cognitive debt.

இது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு. மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சுயமாக யோசித்து எழுதுபவர்கள் ஒரு குழுவினர்களாகவும். மற்றொரு குழு சுயமாக யோசித்து தேவைக்கு ஏற்ப கூகுள் தேடுபொறிகளை பயன்படுத்தி எழுதுபவர்களாகவும், மூன்றாவது குழு முழுவதுமாக AI உதவியை நாடி எழுதுபவர்களாகவும் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் AI தொழில்நுட்பத்தை மட்டுமே முழுவதுமாக பயன்படுத்தி கட்டுரையை எழுதுபவர்களுக்கு, Cognitive debt பிரச்னை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் செயல்பாடுகளை கண்டறியும் EEG (Electroencephalogram) தொழில்நுட்பத்தின் மூலம் இதனை கண்டறிந்துள்ளார்கள்.

Chatgpt user
Chatgpt user

நாம் புத்திக்கூர்மை வாய்ந்தவர்களா, இல்லையா என்பதை முடிவு செய்வதென்பது மூளையில் உள்ள நம்முடைய நியூரான்களின் அமைப்புதான் . நாம் ஏதேனும் ஒன்றினைப் பற்றி சிந்திக்கும்போது நம்முடைய நியூரான்களுக்கு இடையேயான ’சினாப்சிஸ்’ ( சினாப்சிஸ் என்பது ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு இடையேயான கனெக்ஷன்) மற்றும் புதிய புரதங்கள் உருவாவது அதிகரிக்கும். இந்த நியூரான் சினாப்சிஸ் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய நினைவாற்றல், கற்பனைத்திறன், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். ஆனால், நாம் சிந்திக்காமல் முழுவதுமாக AI உதவியை நாடியிருக்கும்போது சினாப்சிஸ் அதிகரிக்காது. இது எதிர்காலத்தில் நினைவாற்றல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் இது குறித்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. AI-யை பயன்படுத்தி கட்டுரைகளை எழுதியவர்களுக்கு பின்னர் அந்தக் கட்டுரையை படிக்கும்போதும், அதனை சார்ந்த கேள்விகளை கேட்கும்போதும், அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், மூளையை பயன்படுத்தி யோசித்து கட்டுரையை எழுதியவர்களுக்கு, அது குறித்த கேள்விகளை கேட்கும்போது 100% அவர்கள் என்ன எழுதினார்கள் என்பது அவர்கள் நினைவில் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மாணவர்கள்
மாணவர்கள்

நமது மூளையில் ’பேப்பர் சர்க்யூட்மென்ட்’ என்று ஒன்று உள்ளது. இது, நாம் ஒன்றினைப் பற்றி பார்க்கும்போதும், படிக்கும்போதும் அதனை பதிவு செய்துகொள்ளும். பின் நாம் அதை சார்ந்து சிந்திக்கும்போது, இரண்டு அல்லது மூன்று சூழற்சிகளுக்கு பின்பு நம் நினைவிற்கு அவற்றை அனுப்பும். AI பயன்படுத்தும்போது நாம் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. அதனை அப்படியே எழுதுவதில்தான் கவனம் செலுத்துகிறோம். அதனால், அந்த தகவல்கள் நம் மூளையில் பதிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தற்போதைய காலகட்டத்தில் 26 சதவீத மாணவர்கள் வீட்டுப்பாடத்தினை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்வதாகவே சில தரவுகள் தெரிவிக்கின்றன. வீட்டுப்பாடம் கொடுப்பதே நம் பள்ளியில் படித்ததை, ரீ கால் செய்துபார்ப்பதற்காகவும், அதைச்சார்ந்து யோசிப்பதற்காகவும்தான். அவற்றையும் AI உதவியுடன் செய்யும்போது யோசிப்பதற்கான வாய்ப்புகளே அங்கே இருக்காது. இது எதிர்காலத்தில் மாணவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

மருத்துவர் பிரபாஷ்
மருத்துவர் பிரபாஷ்

எந்த ஒரு தொழில்நுட்பம் என்றாலும், அதை பயன்படுத்துபவரின் முறையை பொறுத்தே அவை நன்மையாகிறதா, தீமையாகிறதா என்பது முடிவு செய்யப்படும். AI தொழில்நுட்பம் என்பது மனிதர்களுக்கு ஒரு மிகப்பெரிய பலம்தான். அதிலிருந்து பல்வேறு தகவல்களை நம்மால் பெற முடியும். ஆனால், யோசிப்பதற்கே நேரம் கொடுக்காமல் அனைத்து தகவல்களையும் பெற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தவறான விஷயம். AI-ல் தகவல்களை பெறுவதற்கு முன் அதைச் சார்ந்து நாம் யோசிக்க வேண்டும். யோசித்து ஒரு கட்டமைப்பை செய்தபிறகு AI நுட்பத்தின் உதவியை நாட வேண்டும். இப்படி செய்தால் நம்முடைய சுய சிந்தனை மற்றும் AI தொழில்நுட்பத்தின் உதவியால் ஆகச் சிறந்த தகவல்களை கொடுக்க முடியும்’’ என்கிறார் மருத்துவர் பிரபாஷ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...