Skip to main content

Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 32. வேலைக்குச் செல்கிறேன். வீட்டிலும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, மாமனார், மாமியாரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்வது என எல்லா பொறுப்புகளையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், எனக்கு 'நான் சரியான அம்மா இல்லையோ, சரியான மனைவி இல்லையோ, சரியான ஊழியர் இல்லையோ...' என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. எல்லா வேலைகளையும் முழுமையாகச் செய்கிறேனா என சந்தேகம் வருகிறது. இது எப்படிப்பட்ட மனநிலை? கோளாறு என்னிடம்தானா, இதற்கு மனநல சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

உங்களுக்கு இருப்பதைப் போன்ற மனநிலையை உளவியலில் ' சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்று சொல்கிறோம். அதாவது, சூப்பர்மேன் போல.... சூப்பர்வுமனாக இருக்க முயல்வது. சூப்பர்வுமன் சிண்ட்ரோம் உள்ள பெண்கள் அதிக வேலை செய்பவர்களாக, அதீத அர்ப்பணிப்பு உள்ளவர்களாக, அளவுக்கதிகமாக களைத்துப் போகிறவர்களாக, ஸட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களாக இருக்கலாம். ஆறுதலான ஒரு விஷயம் என்ன தெரியுமா?  உங்களைப் போன்ற சூப்பர்வுமென்  இங்கே ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

அம்மாக்கள், வேலைக்குச் செல்கிறவர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், இல்லத்தரசிகள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம். இவ்வளவு ஏன்... பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்குக் கூட வரலாம் என்கின்றன ஆய்வுகள். 

ஒரு வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும்போது 'நான் சரியில்லையோ... இன்னும் அதிகம் ஓடணுமோ, உழைக்கணுமோ' என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். சுமக்கும் எல்லாப் பொறுப்புகளிலும்  'ஆகச் சிறந்தவள்' என்ற கிரீடத்துக்கு ஆசைப்பட்டு ஓடுகிற மனநிலையைத்தான் 'சூப்பர்வுமன் சிண்ட்ரோம்' என்கிறது உளவியல். அப்படி ஆகச்சிறந்தவளாக தன்னை நிரூபிக்க முடியாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு அதீத மன அழுத்தம் ஏற்படுவதையே இது குறிக்கிறது. 100 சதவிகிதம் பர்ஃபெக்ட் ஆக இருப்பது யாருக்கும் சாத்தியமற்றது. Imperfect is perfect too என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

'சூப்பர்வுமன் சிண்ட்ரோம்'

எல்லாவற்றையும் தலையில் சுமக்கும் தியாகிப்பட்டம் தேவையற்றது. தேவைப்படும்போது உதவி கேளுங்கள். அடுத்தவர் உதவியோடு ஒரு வேலையைச் செய்யும்போது நீங்கள் எதிர்பார்க்கும் பர்ஃபெக்ஷன் இன்னும் அதிகரிக்கலாம். இயலாமையை வெளிப்படுத்துவதில் குற்ற உணர்வு தேவையில்லை.

உங்களை அழுத்தும் விஷயங்களை, வேதனைகளை யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள்.  உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழும் உரிமை உங்களுக்கு உண்டு. எப்போதும் எல்லோருக்கும் 'யெஸ்' சொன்னால்தான் நீங்கள் நல்லவராக, வல்லவராக அறியப்படுவீர்கள் என்றில்லை. தேவைப்படும் இடங்களில் 'நோ' சொல்வதும்கூட உங்கள் ஆளுமையின் அழகான வெளிப்பாடுதான்.

இந்த மனநிலையிலிருந்து விடுபட தியானப் பயிற்சி, யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை உங்களுக்கு உதவலாம். உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி மன அழுத்தம் அதிகரிக்கும்போது  மனநல சிகிச்சையை நாடலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...