Skip to main content

Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth

ரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் அவசியம் என்பது எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. ஆனால், அவரவர் சூழல் காரணமாக, நம்மில் பலரால் தினமும் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க முடிவதில்லை என்பதே நிஜம். தூக்கம் பற்றிய சில கூடுதல் வழிகாட்டல்களை தந்தால், இன்னும் பலர் 'ஒரு நல்ல ஆழ்ந்த தூக்க'த்துக்கு முயற்சி செய்வார்கள் என்பதற்காகவே இந்தக் கட்டுரை. தூக்கம் தொடர்பான வழிகாட்டல்களை இங்கே வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த தூக்கவியல் மருத்துவர் ஜெயராம்.

sleep | தூக்கம்
Sleep

நம்முடைய உடலில் நல்ல ஹார்மோன்களும் சுரக்கின்றன. கெட்ட ஹார்மோன்களும் சுரக்கின்றன. ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான், இந்த ஹார்மோன்கள் சமநிலைப்பட்டு, நல்ல ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். கெட்ட ஹார்மோன்களின் சுரப்பு குறையும். இதுதான் நாம் தூங்கும்போது நம்முடைய உடலில் நடக்கிற நல்ல விஷயம். ஒருவேளை தொடர்ச்சியாக ஆழ்ந்த தூக்கம் இல்லையென்றால், கெட்ட ஹார்மோன்கள் அதிகம் சுரந்து கட்டுக்கடங்காத நீரிழிவில் ஆரம்பித்து உயர் ரத்தக்கொதிப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், கேன்சர் செல்களின் பெருக்கம் என ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பிக்கும். புற்றுநோய் உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில், தொடர்ந்து தூக்கம் குறைவதும் ஒன்று. இது ஆராய்ச்சிப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தூக்கம் குறைந்தால் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். விளைவு, அடிக்கடி இருமல், தும்மல், சளி, காய்ச்சலில் ஆரம்பித்து உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரை வரலாம்.

Sleep

உணவு, உடற்பயிற்சி, தூக்கம்...இந்த மூன்றும்தான் ஆரோக்கியத்தின் 3 தூண்கள். இந்த மூன்றில் எது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமானது என்று ஆராய்ச்சி செய்ததில், தூக்கம்தான் அந்த இன்றியமையாத ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

இரவு 10 அல்லது 10.30-க்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்; படுத்த 10 முதல் 20 நிமிடங்களுக்குள் உறங்கிவிட வேண்டும்; தூக்கத்துக்கு இடையே திடீரென விழித்துக்கொள்வது, சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது போன்ற எந்த இடையூறும் இல்லாமல் காலை 5 முதல் 6 மணி வரை நன்கு உறங்க வேண்டும். தூங்கி எழுந்தபின் மறுபடியும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வரக் கூடாது. சோர்வாக உணரக் கூடாது. தலை வலிக்கக் கூடாது. இவையெல்லாம்தான் நல்ல தூக்கத்தின் அறிகுறி.

தூக்கம்

குறட்டை விடுவது, தூக்கத்தின்போது மூச்சுத்திணறி விழித்துக்கொள்வது, தூக்கம் வராமல் தவிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்துக்கொள்வது ஆகியவை இருந்தால், அவர்கள் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் தூங்கி எழுந்த பிறகும் புத்துணர்ச்சியாக உணர மாட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று யோசிப்பார்கள். தூங்கி எழுந்த பிறகு தலைவலிக்கும். மனச்சோர்வும், நெகட்டிவ் எண்ணங்களும் தலை தூக்கும்.

தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும்; சத்தமில்லாமல் இருக்க வேண்டும்; இதமான குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும். மெலட்டோனின் என்பது தூக்கத்தை வரவழைக்கும் ஒரு ஹார்மோன். இது, இருட்டான அறையில் நீங்கள் தூங்கும்போதுதான் நன்கு சுரக்கும். வெளிச்சமான அறையில், போதுமான மெலட்டோனின் சுரக்காதபட்சத்தில், தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும் அது முழுமையான தூக்கமாக இருக்காது.

தூக்கம்
sleep | தூக்கம்

மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது; டீ, காபி அருந்துவது; வயிறு நிறைய சாப்பிடுவது; மது குடிப்பது, புகைப்பது, கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது, டிவி மற்றும் செல்போன் பார்ப்பது போன்றவற்றை மாலை 6 அல்லது 7 மணிக்கு மேல் செய்தீர்களென்றால், உங்கள் தூக்கம் கெடும். உங்கள் தூக்கத்தை எது கெடுக்கிறது என்பதைக் கண்டறிந்து தவிர்ப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

மெலோடியான இசை கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, பால் அருந்துவது, வாழைப்பழம் சாப்பிடுவது, வெதுவெதுப்பான நீரில் 3 டீஸ்பூன் எப்சம் சால்ட் போட்டு அதில் 10 நிமிடம் கால்களை வைத்திருப்பது போன்றவை தூக்கத்துக்கான ஹார்மோன்களைத் தூண்டி தூக்கத்தை வரவழைக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால் இவற்றில் ஒன்றை செய்யலாம். டயபடீஸ் இல்லாதவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். இவற்றுடன் முழுமையான செக்ஸும் தூக்கத்தை வரவழைக்கும் என அமெரிக்க ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன.

தூக்கம்
தூக்கம்

இப்படித் தூங்கும்போது, அறையில் இருக்கிற லேசான வெளிச்சமும் கண் நரம்புகள் வழியாக மூளைக்குச் சென்று, அங்கு சுரக்கிற தூக்கத்துக்கான ஹார்மோன்களை தடுக்கும். ஆனால், இந்தப் பிரச்னை எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும்.

தூக்கமின்மை பிரச்னைக்கு 2 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உடல் நலம் குன்றுவதால் வருகிற தூக்கமின்மை. இரண்டாவது, காரணம் தெரியாத தூக்கமின்மை. சின்ன சத்தத்துக்குக்கூட விழித்துக்கொள்வது, காரணம் தெரியாத தூக்கமின்மை பிரச்னைக்கான ஆரம்ப அறிகுறி.

sleep
sleep

வலதுப்பக்கம் அல்லது இடதுப்பக்கம் படுத்து உறங்குவதுதான் சரியான முறை. மல்லாந்து படுத்து தூங்குவது, குப்புறப்படுத்து தூங்குவது சில பிரச்னைகளை ஏற்படுத்தும். மல்லாந்து படுத்தால், நாக்கு உள் சென்று மூச்சுப்பாதை குறுகும். இதனால் குறட்டை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தூக்கத்தின் இடையிடையே விழித்துக்கொள்ளுதல் போன்ற பிரச்னை வரும். குப்புறப்படுத்து தூங்கும்போது கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலிக்க ஆரம்பிக்கும்.

படுத்தவுடன் தூங்குவது மிக மிக நல்ல விஷயம். ஒருவர், படுக்கைக்குச் சென்ற 20 அல்லது 25 நிமிடங்களில் தூங்கிவிட வேண்டும். இது 5 அல்லது 10 நிமிடங்களில் கூடக்குறைய இருக்கலாம். இதுதான் சரியான முறை. படுக்கையில் படுத்து ஒரு மணி நேரம் கழித்தும் தூக்கம் வரவில்லையென்றால், அதுவும் ஒருவகை தூக்கமின்மை பிரச்னைதான். இதற்கு இதமான இசை கேட்பது, யோக நித்ரா பயிற்சி என தீர்வுகள் இருக்கின்றன.

அலாரம்
அலாரம்

சிலர் 6 மணி நேரம் உறங்கினாலே புத்துணர்ச்சியாக இருப்பார்கள். சிலருக்கு 8 மணி நேரம் தூங்கினால்தான் புத்துணர்ச்சிக் கிடைக்கும். சிலர் 5 மணி நேரம் தூங்கினால்கூட புத்துணர்ச்சியாக இருப்பார்கள். இது தனி மனிதர்களைப் பொறுத்த விஷயம்.

மெக்னீஷியம் மிக மிக முக்கியமான தாது உப்பு. இது நாம் சாப்பிடுகிற பல உணவுப்பொருள்களிலும் இருக்கிறது. மெக்னீஷியமும், தூக்கத்துக்கான அமினோ ஆசிட் புரோட்டீனும் நம் உடலில் போதுமான அளவு இருந்தால் தூக்கம் நன்றாக வரும். முட்டை, பால், சீஸ், தயிர், நட்ஸ் போன்றவற்றில் இந்த தாது உப்பும் அமினோ ஆசிடும் இருக்கின்றன. இவை மூளையில் இருக்கிற தூக்கத்துக்கான ஹார்மோன் சுரப்பதற்கு உதவும். இதேபோல, வைட்டமின் டி-யும் தூக்கத்துக்கு அவசியமான ஒரு சத்துதான்.

Dr. Jayaram
Dr. Jayaram

இந்த நேரத்தில் பெண்களுடைய உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதில் தூக்கமின்மையும் ஒன்று. இதற்கு மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கும். இதனால், சோர்வாக இருப்பார்கள். அதனால்தான், தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வோம்.

sunday
sunday

சனிக்கிழமை இரவில், 'நாளைக்கு சண்டே. மெதுவா எழுந்தா போதும். அதனால, இன்னிக்கு (சனிக்கிழமை) லேட்டா தூங்கலாம்' என்று நினைக்கிறார்கள். அந்த ஒரு நாள் தூக்க ஒழுங்கு மாறுவதால், மறுநாள் இரவு தூக்கம் சரியான நேரத்துக்கு வராது. கூடவே, மறுநாள் (திங்கள்) செய்ய வேண்டிய வேலைகளை யோசித்துக்கொண்டே இருப்பதாலும் தூக்கம் கெடும். அதனால், சனிக்கிழமையும் வழக்கமான நேரத்தில் தூங்கினால்தான், நம் உடலில் இருக்கிற பயலாஜிக்கல் கிளாக் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்தில் தூக்கத்தை வரவழைக்கும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...