Skip to main content

Doctor Vikatan: திடீர் நெஞ்சு வலி என்ன காரணம்? | Heart Attack

Doctor Vikatan: தெரிந்த நண்பருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass surgery) செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, உயிர் பிரிந்ததாக கூறுகின்றனர். இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஒரு நபர் திடீரென உயிரிழக்க பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஹார்ட் அட்டாக் பாதிப்பும் ஒன்று. உங்கள் நண்பர் விஷயத்தில் அவரது உடல்நலம் எப்படியிருந்தது, எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தன என்ற விவரங்கள் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத்தான் தெரியும்.

அவரது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படி இருந்தது என்பது முதல் கேள்வி. இதயத்தின் பம்ப்பிங் திறன் குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது திடீர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் போகும் வாய்ப்புகள் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் வென்ட்ரிகுலர் டக்கிகார்டியா (Ventricular tachycardia) அல்லது வென்டிகுலர் ஃபிப்ரிலேஷன்  (Ventricular fibrillation) எனப்படுகிற மிக மோசமான இதயத்துடிப்பு நிலை. இதயத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். 

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பிறகும்கூட ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  பைபாஸ் கிராஃப்ட்  திடீரென மூடிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. பைபாஸ் கிராஃப்ட் என்பது இதய பைபாஸ் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை.

இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, இதயத்திற்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் போகும். இதனால்  நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.

ஹார்ட் அட்டாக்

இவற்றை சரி செய்ய, அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள வேறு சில ரத்த நாளங்களை எடுத்து அடைபட்ட ரத்த நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இவ்வாறு அடைப்பைத் தவிர்த்து, ரத்த ஓட்டத்தை சீராக்கப் பயன்படும் இந்த ரத்த நாள சிகிச்சைதான்  பைபாஸ் கிராஃப்ட்.  இது திடீரென மூடிக்கொள்ளும் நிலையில், மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் பொதுவான கருத்தாகச் சொல்லலாமே தவிர,  உங்கள் நண்பர் விஷயத்தில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பைபாஸ் செய்த ஒரே வாரத்தில் மரணம் நிகழ்ந்திருப்பதால் இந்த விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...