Skip to main content

Pope Francis: போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்; பதவி விலகுகிறாரா? வாடிகன் சொல்வதென்ன?

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாட்டிகன் அறிவித்துள்ளது. நீண்ட காலமாக ஆஸ்துமா போன்ற சுவாச நோயால் அவதிப்பட்டுவந்த அவர், நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்குச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

வாட்டிகன் நகரின் ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 88 வயது போப் சுயநினைவுடன் உள்ளார். அவருக்கு உதவியாக அதிகப்படியான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அவரது ரத்தத்தில் ப்ளேட்லெட்டுகள் மிகக் குறைவாக இருந்ததால், ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட கால நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், அது தொடர்பாகக் குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சியால் பாதிக்கப்பட்டார். பிப்ரவரி 14ம் தேதி ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஒரு வாரத்துக்கும் மேல் நீடிக்கும் அழற்சியால் அவதிப்பட்டு வருகிறார்.

Pope Francis

"தூய தந்தையின் நிலை மோசமாகவே இருக்கிறது. அவர் ஆபத்தில் உள்ளார்" என வாடிகன் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாள்களை விட தற்போது அதிக வலியை உணரும் போப் பிரான்சிஸுக்கு ஆக்ஸிஜனைக் குறைத்தும், அதிகரித்தும் நுரையீரல் சிக்கலைச் சமாளித்து வருகின்றனர்.

நிமோனியா பாதிப்பால் ஸ்பெசிஸ் என்ற ரத்தத்தில் நச்சு உருவாகும் நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Pope பதவி விலகுகிறாரா?

போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்யவிருக்கிறார் எனப் பரவு வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வாடிகன் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ராஜினாமா தொடர்பான வதந்திகளை 'பயனற்றவை' என்றும், போபின் உடல் நிலைதான் இப்போது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

https://bit.ly/VikatanWAChannel
Vikatan Whatsapp Channel

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...