Skip to main content

Pope Francis: போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்; பதவி விலகுகிறாரா? வாடிகன் சொல்வதென்ன?

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாட்டிகன் அறிவித்துள்ளது. நீண்ட காலமாக ஆஸ்துமா போன்ற சுவாச நோயால் அவதிப்பட்டுவந்த அவர், நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்குச் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

வாட்டிகன் நகரின் ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 88 வயது போப் சுயநினைவுடன் உள்ளார். அவருக்கு உதவியாக அதிகப்படியான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அவரது ரத்தத்தில் ப்ளேட்லெட்டுகள் மிகக் குறைவாக இருந்ததால், ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட கால நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், அது தொடர்பாகக் குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சியால் பாதிக்கப்பட்டார். பிப்ரவரி 14ம் தேதி ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஒரு வாரத்துக்கும் மேல் நீடிக்கும் அழற்சியால் அவதிப்பட்டு வருகிறார்.

Pope Francis

"தூய தந்தையின் நிலை மோசமாகவே இருக்கிறது. அவர் ஆபத்தில் உள்ளார்" என வாடிகன் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாள்களை விட தற்போது அதிக வலியை உணரும் போப் பிரான்சிஸுக்கு ஆக்ஸிஜனைக் குறைத்தும், அதிகரித்தும் நுரையீரல் சிக்கலைச் சமாளித்து வருகின்றனர்.

நிமோனியா பாதிப்பால் ஸ்பெசிஸ் என்ற ரத்தத்தில் நச்சு உருவாகும் நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Pope பதவி விலகுகிறாரா?

போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்யவிருக்கிறார் எனப் பரவு வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வாடிகன் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ராஜினாமா தொடர்பான வதந்திகளை 'பயனற்றவை' என்றும், போபின் உடல் நிலைதான் இப்போது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

https://bit.ly/VikatanWAChannel
Vikatan Whatsapp Channel

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...