Skip to main content

Doctor Vikatan: பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்பது உண்மையா?

Doctor Vikatan: பலமான விருந்தில் சாப்பிடும்போதோ, என்றோ ஒருநாள் ஸ்வீட்ஸ் கொஞ்சம் அதிகம் சாப்பிடும்போதோ, உடனே வெந்நீர் குடித்துவிட்டால், உடலில் கொழுப்பு சேராது, எடையும் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

டயட்டீஷியன் கற்பகம்

பலமான விருந்தும், ஸ்வீட்ஸும் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்றால், எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் எல்லோரும் மிகச் சுலபமாக எடையைக் குறைத்துவிடுவார்களே....  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பதெல்லாம் தேவையே இருக்காதே...

பொதுவாக பலமான விருந்தோ, ஸ்வீட்ஸோ  சாப்பிட்டால் உங்கள் எடை நிச்சயம் கூடியிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு காரணம் அந்த உணவுகள் மற்றும் இனிப்புகளிலுள்ள கலோரிகளின் அளவு. அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இரவு உணவுக்கு கலோரிகள் அதிகமான விருந்து உணவு அல்லது அதிக இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.  முன்கூட்டியே அப்படி சாப்பிடப் போகிறீர்கள் என்று தெரியும் பட்சத்தில் அன்றைய தினம் காலை உணவு மற்றும் மதிய உணவை கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

நிறைய காய்கறிகள் உள்ளதுபோன்ற பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். சாப்பிடும் அளவும் முக்கியம். 

செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீர் குடிக்கலாம்.

இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை என்பவர்கள், அதை அளவுக்கதிமாகச் சாப்பிடாமல், அளவோடு சாப்பிடும்போது அடுத்தநாள் எடை கூடாது. முதல்நாள் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பை ஈடுகட்ட அடுத்தநாள் செய்யக்கூடிய மேஜிக்கென்று எதுவும் இல்லை. திரவ உணவுகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம்.

வெந்நீர் குடிப்பதெல்லாம் எந்தவகையிலும் எடையைக் குறைக்க உதவாது. செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீர் குடிக்கலாம். வயிற்று உப்புசம், நிறைய சாப்பிட்டதால் ஏற்படுகிற ஒருவித கனத்த உணர்வு போன்றவற்றிலிருந்து விடுபட அது உதவுமே தவிர, எடைக்குறைப்புக்கு உதவாது. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், உணவு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...