Skip to main content

Doctor Vikatan: பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்பது உண்மையா?

Doctor Vikatan: பலமான விருந்தில் சாப்பிடும்போதோ, என்றோ ஒருநாள் ஸ்வீட்ஸ் கொஞ்சம் அதிகம் சாப்பிடும்போதோ, உடனே வெந்நீர் குடித்துவிட்டால், உடலில் கொழுப்பு சேராது, எடையும் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

டயட்டீஷியன் கற்பகம்

பலமான விருந்தும், ஸ்வீட்ஸும் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்றால், எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் எல்லோரும் மிகச் சுலபமாக எடையைக் குறைத்துவிடுவார்களே....  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பதெல்லாம் தேவையே இருக்காதே...

பொதுவாக பலமான விருந்தோ, ஸ்வீட்ஸோ  சாப்பிட்டால் உங்கள் எடை நிச்சயம் கூடியிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு காரணம் அந்த உணவுகள் மற்றும் இனிப்புகளிலுள்ள கலோரிகளின் அளவு. அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இரவு உணவுக்கு கலோரிகள் அதிகமான விருந்து உணவு அல்லது அதிக இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.  முன்கூட்டியே அப்படி சாப்பிடப் போகிறீர்கள் என்று தெரியும் பட்சத்தில் அன்றைய தினம் காலை உணவு மற்றும் மதிய உணவை கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

நிறைய காய்கறிகள் உள்ளதுபோன்ற பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். சாப்பிடும் அளவும் முக்கியம். 

செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீர் குடிக்கலாம்.

இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை என்பவர்கள், அதை அளவுக்கதிமாகச் சாப்பிடாமல், அளவோடு சாப்பிடும்போது அடுத்தநாள் எடை கூடாது. முதல்நாள் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பை ஈடுகட்ட அடுத்தநாள் செய்யக்கூடிய மேஜிக்கென்று எதுவும் இல்லை. திரவ உணவுகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம்.

வெந்நீர் குடிப்பதெல்லாம் எந்தவகையிலும் எடையைக் குறைக்க உதவாது. செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீர் குடிக்கலாம். வயிற்று உப்புசம், நிறைய சாப்பிட்டதால் ஏற்படுகிற ஒருவித கனத்த உணர்வு போன்றவற்றிலிருந்து விடுபட அது உதவுமே தவிர, எடைக்குறைப்புக்கு உதவாது. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், உணவு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...