Skip to main content

Doctor Vikatan: அப்பாவின் பல வருட சிகரெட் பழக்கம், குடும்பத்தாரின் பயம்... மீட்க முடியுமா?

Doctor Vikatan: என் அம்மாவும் அப்பாவும் வெளியூரில் தனியே வசிக்கிறார்கள். அப்பாவுக்கு 70 வயதாகிறது. பல வருடங்களாக அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொடர்கிறது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதை நிறுத்த மறுக்கிறார். வயதாவதால், அம்மாவுக்கும் அப்பாவின் உடல்நலம் குறித்த பயம் அதிகரித்திருக்கிறது. தெரிந்த குடும்பங்களில் புற்றுநோய் பாதிப்பையும் மரணங்களையும் பற்றி கேள்விப்படும்போது அந்த பயம் எல்லோருக்கும் அதிகரிக்கிறது. அப்பாவின் புகைப்பழக்கத்தை நிறுத்த முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

முதல் வேலையாக உங்கள் அப்பா எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கிறார் என்பதை கவனியுங்கள். உதாரணத்துக்கு, டென்ஷன் அதிகமான நேரத்தில் பிடிக்கிறார் என்றால் டென்ஷனான சூழல்களிலிருந்து அவரை விடுவிக்க முயலலாம். 

அவர் புகை பிடிக்கும்போதெல்லாம் கோபப்பட்டு, சண்டை போடுவதால் நிலைமை இன்னும் மோசமாகுமே தவிர, தீர்வு கிடைக்காது. உங்கள் கோபமும் சண்டையும் அவரை இன்னும் டென்ஷனாக்கி, கூடுதலாக இன்னும் சில சிகரெட்டுளை புகைக்க வைக்கும். 

அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி, மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். பல வருட சிகிரெட் பழக்கம் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். முழு உடல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுங்கள்.

சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட

ஒருவேளை பாதிப்பு இருப்பது தெரிந்தால் அதற்குப் பிறகு அவருக்கு பயம் வரலாம். அவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினால் டீ அடிக்ஷன் மையங்களை நாடலாம். அதற்கு முன் சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் நிகோடின் பேட்ச் ஒட்டுவது போன்று எளிய வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

தெரிந்தவர்களின் குடும்பங்களில் நிகழ்ந்த புற்றுநோய் மரணங்களை நினைத்து இத்துடன் குழப்பி பயப்பட வேண்டாம். இந்தப் பழக்கத்திலிருந்து  அப்பாவை மீட்க நீங்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும். அவரது அன்பும் அருகாமையும் உங்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பொறுமையாகவும் அன்போடும் எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...