Skip to main content

Doctor Vikatan: முடி உதிர்வுக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: என் வயது 32. எனக்கு 15 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எத்தனையோ முறை முயன்றும் அதை நிறுத்த முடியவில்லை. 25 வயதிலேயே எனக்கு அதிக அளவில் முடி உதிர ஆரம்பித்தது. அதற்கும் என்னென்னவோ சிகிச்சைகள் செய்துபார்த்துவிட்டேன். ஆனால், சிகரெட் பழக்கம்தான் காரணம் என்றும் அதை நிறுத்தும்படியும் சொல்கிறார் ஒரு மருத்துவர். சிகரெட் பிடிக்கிற எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்னை வருவதில்லையே.... உண்மையிலேயே இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா.... என்னுடைய முடி உதிர்வு பிரச்னையை சரிசெய்ய என்னதான் வழி?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

புகைப் பழக்கத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று உங்கள் மருத்துவர் சொன்னது உண்மைதான். அதன் பின்னணி தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் புகைப்பழக்கம், முடிக் கற்றைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ரத்த நாளங்களைச் சுருக்கும். அதன் விளைவாக ரத்த ஓட்டம் குறைந்து கூந்தலின் வேர்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும்.  கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.  

சிகரெட் புகையில் உள்ள நச்சுகள் மற்றும் எதிர்வினை தன்மை கொண்ட மூலக்கூறுகளான ஃப்ரீ ரேடிகல்ஸ் இரண்டும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும்.  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது உடலில் ஃப்ரீ ரேடிகல்ஸ்  அதிகமாக உற்பத்தியாகி, உடலின் செல்கள், புரதங்கள் மற்றும் டிஎன்ஏவை சேதப்படுத்தும் ஒரு நிலை. இது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பாதித்து, பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒரு பகுதியாக கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டு, அவை பலவீனமாகி, மெலியும்.  

புகைப்பழக்கம் ஹார்மோன் அளவுகளை மாற்றக்கூடியது.

புகைப்பழக்கம் என்பது ஹார்மோன் அளவுகளை மாற்றக்கூடியது. குறிப்பாக, டிஹெச்டி எனப்படும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (dihydrotestosterone)  என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்கக்கூடியது.  இந்த ஹார்மோன், ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா (androgenetic alopecia) எனப்படும் முடி உதிர்வு பிரச்னையை ஏற்படுத்துவதில் முக்கியமானது. தவிர, புகைப்பழக்கம் மண்டைப்பகுதியில் இன்ஃப்ளேமேஷன் எனப்படும் அழற்சியை ஏற்படுத்தி, மறைமுக விளைவாக முடி உதிர்வுக்கும் காரணமாகும். 

முடி உதிர்வைத் தடுக்க மட்டுமன்றி, இளமையான தோற்றம் வேண்டும் என்போரும் புகைப்பழக்கத்தை நிறுத்தியே ஆக வேண்டும். புகைப்பழக்கத்தைத் தொடரும் நபர்களுக்கு சீக்கிரமே முதுமைத் தோற்றம் ஏற்படும். இளநரையும் கூந்தல் மெலிவும் ஏற்படும். புகைப்பழக்கத்தால் மண்டைப்பகுதியும் கூந்தலும் வறண்டுபோகும். அதன் தொடர்ச்சியாக பொடுகு பிரச்னை வரும். பொடுகு வந்தால் அது முடி உதிர்வு, அரிப்பு, முகப்பரு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரிசையாக வர ஆரம்பிக்கும். 

புகைப்பழக்கத்தால் மண்டைப்பகுதியும் கூந்தலும் வறண்டுபோகும். அதன் தொடர்ச்சியாக பொடுகு பிரச்னை வரும்.

புகைப்பழக்கத்தை நிறுத்திய சில மாதங்களிலேயே ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட ஆரம்பிப்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் உணர்வார்கள். அந்த வகையில் அவர்களுக்கு முடி உதிர்வு கட்டுப்படுவதையும் முடி வளர்ச்சி அதிகரிப்பதையும் கண்கூடாகப் பார்ப்பார்கள். எனவே, முதல் வேலையாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். உங்களால் முடியாத நிலையில், நிபுணர்களின் உதவியை நாடுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...