Skip to main content

Doctor Vikatan: முடி உதிர்வுக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: என் வயது 32. எனக்கு 15 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. எத்தனையோ முறை முயன்றும் அதை நிறுத்த முடியவில்லை. 25 வயதிலேயே எனக்கு அதிக அளவில் முடி உதிர ஆரம்பித்தது. அதற்கும் என்னென்னவோ சிகிச்சைகள் செய்துபார்த்துவிட்டேன். ஆனால், சிகரெட் பழக்கம்தான் காரணம் என்றும் அதை நிறுத்தும்படியும் சொல்கிறார் ஒரு மருத்துவர். சிகரெட் பிடிக்கிற எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்னை வருவதில்லையே.... உண்மையிலேயே இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டா.... என்னுடைய முடி உதிர்வு பிரச்னையை சரிசெய்ய என்னதான் வழி?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

புகைப் பழக்கத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று உங்கள் மருத்துவர் சொன்னது உண்மைதான். அதன் பின்னணி தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் புகைப்பழக்கம், முடிக் கற்றைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ரத்த நாளங்களைச் சுருக்கும். அதன் விளைவாக ரத்த ஓட்டம் குறைந்து கூந்தலின் வேர்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும்.  கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.  

சிகரெட் புகையில் உள்ள நச்சுகள் மற்றும் எதிர்வினை தன்மை கொண்ட மூலக்கூறுகளான ஃப்ரீ ரேடிகல்ஸ் இரண்டும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும்.  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது உடலில் ஃப்ரீ ரேடிகல்ஸ்  அதிகமாக உற்பத்தியாகி, உடலின் செல்கள், புரதங்கள் மற்றும் டிஎன்ஏவை சேதப்படுத்தும் ஒரு நிலை. இது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை பாதித்து, பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒரு பகுதியாக கூந்தலின் வேர்கள் பாதிக்கப்பட்டு, அவை பலவீனமாகி, மெலியும்.  

புகைப்பழக்கம் ஹார்மோன் அளவுகளை மாற்றக்கூடியது.

புகைப்பழக்கம் என்பது ஹார்மோன் அளவுகளை மாற்றக்கூடியது. குறிப்பாக, டிஹெச்டி எனப்படும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (dihydrotestosterone)  என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்கக்கூடியது.  இந்த ஹார்மோன், ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா (androgenetic alopecia) எனப்படும் முடி உதிர்வு பிரச்னையை ஏற்படுத்துவதில் முக்கியமானது. தவிர, புகைப்பழக்கம் மண்டைப்பகுதியில் இன்ஃப்ளேமேஷன் எனப்படும் அழற்சியை ஏற்படுத்தி, மறைமுக விளைவாக முடி உதிர்வுக்கும் காரணமாகும். 

முடி உதிர்வைத் தடுக்க மட்டுமன்றி, இளமையான தோற்றம் வேண்டும் என்போரும் புகைப்பழக்கத்தை நிறுத்தியே ஆக வேண்டும். புகைப்பழக்கத்தைத் தொடரும் நபர்களுக்கு சீக்கிரமே முதுமைத் தோற்றம் ஏற்படும். இளநரையும் கூந்தல் மெலிவும் ஏற்படும். புகைப்பழக்கத்தால் மண்டைப்பகுதியும் கூந்தலும் வறண்டுபோகும். அதன் தொடர்ச்சியாக பொடுகு பிரச்னை வரும். பொடுகு வந்தால் அது முடி உதிர்வு, அரிப்பு, முகப்பரு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரிசையாக வர ஆரம்பிக்கும். 

புகைப்பழக்கத்தால் மண்டைப்பகுதியும் கூந்தலும் வறண்டுபோகும். அதன் தொடர்ச்சியாக பொடுகு பிரச்னை வரும்.

புகைப்பழக்கத்தை நிறுத்திய சில மாதங்களிலேயே ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட ஆரம்பிப்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் உணர்வார்கள். அந்த வகையில் அவர்களுக்கு முடி உதிர்வு கட்டுப்படுவதையும் முடி வளர்ச்சி அதிகரிப்பதையும் கண்கூடாகப் பார்ப்பார்கள். எனவே, முதல் வேலையாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். உங்களால் முடியாத நிலையில், நிபுணர்களின் உதவியை நாடுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...