Skip to main content

Doctor Vikatan: கால் வலி... வெந்நீரில் பாதங்களை வைத்திருப்பது தீர்வு தருமா?

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. அடிக்கடி கால்களில், குறிப்பாக பாதங்களில் வலி வருகிறது.  இதை பற்றி சொல்லும்போது பலரும் 'வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்' என்பதையே தீர்வாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை.... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

பாத வலிக்கு கால்களை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருக்கும் வழக்கம் பல வருடங்களாக நாம் பின்பற்றும் சிகிச்சை தான். அதில் நிறைய பலன்கள் உண்டு. அதே சமயம் அப்படிச் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் நீரிழிவு பாதிப்பு உள்ளவர் எனில், வெந்நீரில் கால்களை வைப்பதற்கு முன்பு உங்கள் உணர்ச்சி நரம்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனியுங்கள். அடுத்து, கால்களில் ஏதேனும் புண்களோ, தொற்றோ இருந்தாலும் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால், வெந்நீரில் கால்களை வைக்கும்போது, சருமத்தின் வழியே அது பரவ வாய்ப்பு உண்டு. அடுத்தது, வெந்நீரானது, உங்கள் கை பொறுக்கும் அளவு சூட்டில் இருக்க வேண்டும். அதாவது, 36 முதல் 38 டிகிரி வெப்பம் சரியானது. ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. அதற்கு மேல் வைத்தால் கால்கள் வீங்கலாம்.

வெந்நீரில் கால்களை வைப்பதால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி குறையும். கால்களின் சருமத்தில் உள்ள அழுக்குகளும் கிருமிகளும் நீங்குவதால் தொற்று வருவது தவிர்க்கப்படும்.

வெந்நீரில் கால்களை வைப்பதால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா என்றால். நிச்சயம் கிடைக்கும். பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி குறையும்.

வெந்நீரில் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்க்கும்போது பலன்கள் இன்னும் அதிகரிக்கும். சாதாரணமாக, நாம் உப்பு சேர்த்த வெந்நீரில் கால்களை வைத்திருப்போம். உப்பு, கிருமி நாசினியாகச் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மருந்துக் கடைகளில் எப்சம் சால்ட் என ஒன்று கிடைக்கும்.  அது தசைகளைத் தளர்த்தி, நல்ல தூக்கத்தையும் வரவழைக்கும். அதே வெந்நீரில் கிருமி நாசினி சேர்த்து, கால்களை ஊற வைத்தால், மழைக்காலத் தொற்றுகளில் இருந்து காக்கும்.  எனவே, அளவோடு செய்வதன் மூலம் வெந்நீர் சிகிச்சை அற்புதமான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதையெல்லாம் தாண்டி, உங்களுக்கு கால் வலி பல நாள்களாகத் தொடர்கிறது என்றால், வெந்நீர் சிகிச்சையை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி, வலிக்கான காரணம் அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...