Skip to main content

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியை பச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிசியைச் சாப்பிட்டதால் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அரிசியை சாப்பிடவே பயமாக இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

அரிசியைப் பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் ஆபத்து தெரியாமல் தொடர்ந்து அதைச் சாப்பிடுகிறார்கள். ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவமாகத்தான் சிறுமியின் மரணச் செய்தியைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருள்களை உண்ணும் ஒரு பழக்கம். உங்களுக்கு இருக்கும் அரிசி சாப்பிடும் பழக்கமும் இந்த வகைதான்.

அரிசி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வரும். ஆனாலும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலில் சாப்பிடுவார்கள். அரிசி,  உணவுப்பொருள்தானே... அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம்.  ஆனால், சமைக்காத அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும். முக்கியமாக, இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரித்துவிடும்.

இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது.  குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம். அரிசி, மண் போன்றவற்றைச் சாப்பிடுவதால், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகரிக்கும். ரத்தச்சோகை அளவுக்கு அதிகமாகும்போது அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறலாம்.  அரிசியை பச்சையாகச் சாப்பிடுவதால், ஃபுட் பாய்சன் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம்.  குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமி, அரிசியை ஊறவைத்துச் சாப்பிடும் வழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அப்படி ஊறவைப்பதாலும் கிருமித் தொற்று ஏற்பட்டு, ஃபுட் பாய்சன் ஆகலாம். 

இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம்.

சமைக்காத அரிசியில் பசிலஸ் சீரியஸ்  (Bacillus cereus )  எனப்படும் கிருமி இருக்கும். அதுதான் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமி. இதன் வீரியத்தைப் பொறுத்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.  சமைக்காத அரிசி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்போதும் களைப்பு, தூக்கம், முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, இந்தப் பழக்கத்தை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது.

எனவே, நீங்களும் சரி, உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்தாலும் சரி, அவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, இதிலிருந்து வெளியே வர அறிவுறுத்துங்கள். ஏதேனும் சத்துக்குறைபாடு இருக்குமானால், அதற்கான சிகிச்சை கொடுத்தாலே, இப்படிப்பட்ட வித்தியாசமான உணவுத் தேடலிலிருந்து வெளியே வரலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...