Skip to main content

அதிகரிக்கும் பதின்வயது கர்ப்பங்கள்... தடுத்து நிறுத்த, ஒவ்வொருவரும் களமாடுவோம்... வாருங்கள் தோழிகளே!

தமிழ்நாட்டில் பதின்வயது கர்ப்பங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. 2019- 2024 காலகட்டத்தில் 62,870 பதின்பருவ அம்மாக்கள் இனம் காணப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

2019-20 காலகட்டத்தில் 1.1% ஆக பதிவான பதின்பருவ கர்ப்பங்கள், 2023-24 காலகட்டத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளன. மாநிலத்திலேயே மிக அதிகமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.3% எனப் பதிவாகியுள்ளது. தேனி, பெரம்பலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன.

பள்ளி இடைநிற்றல், குழந்தைத் திருமணம், சமூக விழிப்பு உணர்வின்மை, பாலியல் வன்முறை, பாலியல் ஈர்ப்பு என இதற்கான காரணிகள் பல. ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனி கவனம் கொடுத்து அரசு, சமூகம், குடும்பங்கள், தன்னார்வ அமைப்புகள் அனைத்தும் தீவிரமாகக் களமாட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

குடும்பங்களால் திணிக்கப்படும் திருமணங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க ஹெல்ப்லைன் எண்கள் 1098 மற்றும் 181, மத்திய அரசின் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (One Stop Centre), மாநில அரசின் சமூகநலத்துறையினர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவினர் என அமைப்புகள் களத்தில் இருக்கின்றன. அனைத்தையும் மீறி குழந்தைத் திருமணங்கள் தொடர்கின்றன என்றால், அரசின் நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். விழிப்பு உணர்வு ஊட்டும் பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

டீன் வயது காதல்கள், பாலின ஈர்ப்பு போன்றவையும் பருவவயது கர்ப்பங்களுக்குக் காரணமாகின்றன. பெற்றோர் இந்த கசப்பான நிலவரத்தை புரிந்து, பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து அவர்களை நெறிப்படுத்த வேண்டும். பாலியல் கல்வி, பதின் வயதுகளில் கர்ப்பமடைவதில் உள்ள ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் பற்றியெல்லாம் பக்குவமாக விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்ப்பத்தடை வழிகள் பற்றிய அறிவூட்டலும், அதற்கான அணுகலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பள்ளி இடைநிற்றல்களை தீவிரமாகக் கண்காணித்து, சுழியம் என்கிற நிலைக்குக் கொண்டு செல்ல பள்ளிக்கல்வித்துறையும் பெற்றோரும் செயலாற்ற வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகளால் பெண் குழந்தைகள் கர்ப்பமாக்கப்படுவது, கொடுமையான அவலம். நம் வீட்டில் மட்டுமல்ல... அக்கம்பக்கம், தெரு, ஊர், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பதின்வயது பெண்களின் பாதுகாப்பில், நம்மால் முடிந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்வோம் தோழிகளே. பத்திரமாக அவர்களை அனுப்பி வைப்போம் உயர் கல்விக்கும்... உயர் வாழ்க்கைக்கும்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...