Skip to main content

Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..!

ரு பெண்ணை வளைவு நெளிவுகளுடன், மார்பகங்களில்  கொழுப்புத் திசுக்களுடன்  பெண்மையாகக் காட்டுவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான். இதைத் தவிர, ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு செய்கிற மற்ற நன்மைகள் என்னென்ன; ஒரு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் எப்போது குறையும்; எப்போது அதிகரிக்கும்; அப்படி நிகழும்போது என்னென்ன பிரச்னைகள் வரும் என ஈஸ்ட்ரோஜன் தொடர்பான அத்தனை விஷயங்களையும் சொல்கிறார் எண்டோகிரானாலஜிஸ்ட் டாக்டர் ஸ்ருதி.

Hormones

பெண்களின் உடலில் இருக்கிற முக்கியமான செக்ஸ் ஹார்மோன் இது. 'நான் ஒரு பெண்' என்கிற ஒரு உணர்வை ஏற்படுத்துகிற ஹார்மோனும்  இதுதான்.  உற்பத்தியாவது சினைப்பையில் இருந்து என்றாலும், 'ஒரு சிறுமியின் வளர் இளம் பருவத்தில் இருந்து நீ அதிகமாக உற்பத்தியாக வேண்டும்' என்று அதற்குக் கட்டளையிடுவது மூளையின் கீழ்ப்பகுதியில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பிதான்.

  • ஒரு சிறுமியை பெண்ணாக மாற்றுவது ஈஸ்ட்ரோஜன்தான். பதின்ம வயதுகளில் இருக்கிற சிறுமிகளின் அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதியில் ரோம வளர்ச்சியை ஏற்படுத்தும்.

  • அதுவரை தட்டையாக இருந்த மார்புகளை கொழுப்புத் திசுக்களால் மெல்ல மெல்லப் பூரித்து எழும்ப  வைக்கும்.  

  • பெண்களுக்கே உரித்தான மெத்தென்ற சருமத்தைக் கொடுக்கும்.

  • சினைப்பைகளை வளர்த்து, கரு முட்டையை உருவாக்கி, அதை வளர்த்து, மாதவிடாயாக வெளிப்படுத்தும். இதைத் தான் 'பெரியவளாகி விட்டாள்' நாம் என்று கொண்டாடுகிறோம்.

  •  மாதந்தோறும் பீரியட்ஸ் ரெகுலராக வர வேண்டுமென்றாலும் ஈஸ்ட்ரோஜனின் உதவி தேவை.  

  • தாம்பத்திய உறவின்போது, அந்தரங்க உறுப்பில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி உறவு நேரத்தை வலியில்லாமல் வைக்கும்.

  • கருப்பையைத் தேவையான அளவுக்கு வளர்க்கும். கருப்பையின் உள்ளே இருக்கிற என்டோமெட்ரியம் திசு வளர உதவி செய்யும். இந்த என்டோமெட்ரியம் திசுவில்தான் கருவானது பதிந்து உருவாகும். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், கருவில் இருக்கிற சிசுவின் மெத்தை இந்த என்டோமெட்ரியம். இந்த மெத்தையை உருவாக்குவது ஈஸ்ட்ரோஜன்.

Hormones

எலும்புகளை வலுவாக இருக்க வைக்கும்.  
உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வளர்சிதை மாற்றம் நிகழ்ந்தால்தான் உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி, நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  
உடம்பில் தேவையான கொழுப்புச் சத்தைச் சேமித்து வைக்கும்.

  • சிறுமிகள் என்றால், வயதுக்கு வரத் தாமதமாகும். மார்பக வளர்ச்சி, அக்குள் முடி, அந்தரங்க முடி வளராது.  

  • வயதுக்கு வந்த பிறகு குறைந்தால்,  3 அல்லது 4 மாதத்துக்கு ஒரு தடவை பீரியட்ஸ் வரலாம்.

  • திருமணத்துக்குப் பிறகு குறைந்தால் உறவின்போது வலி இருக்கலாம்.

  • நடுவயதின்போது குறைந்தால், ஆஸ்டியோபோரோசிஸ். என்கிற எலும்புத்தேய்மான பிரச்னை வரும்.  

  • மெனோபாஸ் நேரத்தில்  உடம்பு திடீரென்று சூடாவதற்கும், அடுத்த நொடி உடல் நார்மல் டெம்பரேச்சருக்கு வந்துவிடுவதற்கும், பிறப்புறுப்பு வறண்டு போய் தாம்பத்திய தருணங்கள் வலி மிகுந்து இருப்பதற்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடுதான் காரணம்.  

Estrogen
  • ஈஸ்ட்ரோஜன் அதிகமாவது ரொம்பவும் அரிதாக நிகழ்கிற ஒரு விஷயம். சினைப்பையில் புற்றுநோய் வந்தால் ஈஸ்ட்ரோஜன் அதிகமாகச் சுரக்கும்.

  •  கருத்தடை மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது.

  •  நீங்கள் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதன் லேபிளில் ஈஸ்ட்ரோஜன் கலக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.

  •  ஈஸ்ட்ரோஜன் அதிகமானால், உடல் எடை அதிகரிக்கும்.

  • மாதவிடாயின்போது ரத்தப் போக்கு குறையும் அல்லது அதிகரிக்கும்.

  • குறைவது போலவே ஈஸ்ட்ரோஜன் அதிகமானாலும் பிறப்புறுப்பு வறண்டுபோய், உறவின்போது வலி ஏற்படும்.

முடியும். ஒரு சிறுமி வயதுக்கு வரவில்லை என்றாலோ, அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வந்தாலோ ஈஸ்ட்ரோஜன் அளவை அதற்கான ரத்த பரிசோதனை  estradiol (E2) மூலம் தெரிந்துகொள்ளலாம். குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு கருமுட்டை வளர்ச்சி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவும், மெனோபாஸ் வரப்போகிறதா என்று தெரிந்துகொள்ளவும் இந்தப் பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையை மாதவிடாய் வந்த 2 -ம் நாளிலிருந்து 5-ம் நாளுக்குள் செய்ய வேண்டும்.  

எண்டோகிரானாலஜிஸ்ட் டாக்டர் ஸ்ருதி

இதற்கான மாத்திரையே இருக்கிறது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடவே கூடாது. உணவுப் பொருள்களில் சோயாவில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் இருக்கிறது. ஆனால், அதையும்கூட ரத்த பரிசோதனை செய்து, உங்கள் உடம்புக்குத்  தேவையான அளவுக்கு மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு சாப்பிடுவதே நல்லது. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...