Skip to main content

Health : "ஏ.சி அறையில் இருந்தால் உள்நாக்கில் தொற்று ஏற்படுமா?"

ள்நாக்கு சதை வளர்ச்சியினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். உள்நாக்கு சதை வளர்ச்சி என்றால் என்ன, அது ஏன் வருகிறது, அதனை எவ்வாறு சரி செய்வது என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடையை தெரிந்துகொள்வதற்காக சென்னையில் உள்ள பொதுநல மருத்துவர் டாக்டர் அருணாச்சலத்திடம் பேசினோம்.

throat problem

அதென்ன உள்நாக்கு..?

''உள்நாக்கை உடற்கூறியல் ரீதியாக யுவ்லா (uvula) எனக் கூறுவோம். இது மனிதனாக பிறக்கக்கூடிய அனைவருக்கும் கட்டாயமாக இருக்கக்கூடிய ஒன்று. இதை உணவுக் குழாயின் ஆரம்பப்பகுதி எனவும் சொல்லலாம். நமது தொண்டையில் உள்நாக்கு மட்டுமல்ல, இருபுறமும் டான்சில் எனப்படும் நிணநீர் சுரப்பி இருக்கும். சிலருக்கு டான்சில் பெரியதாக இருக்கும். சிலருக்கு சிறியதாக இருக்கும். இதன் முக்கிய நோக்கம் அதிகப்படியான எச்சிலை சுரக்க வைத்து தொண்டை மற்றும் உணவு குழாயின் ஆரம்ப பகுதியை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதுதான்.

உள்நாக்கு சதை வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

பிறர் இருமும் போதும் தும்மும் போதும் அவர்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்கு பரவுகிறது. அந்த கிருமியானது தொண்டையில் தங்கி, பல்கி பெருகுவதனால் ஏற்படும் வீக்கம் தான் உள்நாக்கு சதை வளர்ச்சி. இது தொண்டையில் ஏற்படும் தொற்றுகளில் ஒன்று. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சுலபமாக காற்றின் மூலம் பரவக்கூடியது. உள்நாக்கானது இயல்புக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்றால் தொண்டையில் ஏதோ நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். தவிர, அதிக குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர் பானங்கள் அருந்துவதாலும், ஏ.சி அறையில் இருப்பதாலும்,‌ ஏ.சி பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதாலும்கூட உள்நாக்கில் தொற்று ஏற்படலாம்.

டாக்டர். அருணாச்சலம்

கை வைத்தியம் மட்டும் போதுமா?

இப்போதும் கிராமப்புறங்களில் உள்நாக்கு சதை வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் உப்பு நீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க சொல்வார்கள். இதைவிட மருத்துவரிடம் சென்று ஆன்டிபயாடிக் போட்டுக் கொள்வது நல்லது.

சூடாக அருந்தினாலே சரியாகி விடுமா?

உள்நாக்கு சதை வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னால் சிறிதாக வீக்கம் ஏற்படும். அப்போதே வெந்நீர், பால், டீ, காபி போன்றவற்றை சூடாக அருந்தினால் கிருமிகள் இறந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு பிறகும் சரியாகவில்லை என்றால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற‌வேண்டும். வைரஸ் தொற்றாக இருந்தால் 3 நாட்களில் சரியாகிவிடும். பாக்டீரியாவாக இருந்தால் மருத்துவர் கொடுக்கும் ஆன்டிபயாடிக் சாப்பிட்டால் சரியாகும்.''

Vikatan play▶️

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...