Skip to main content

Doctor Vikatan: High BP-ஐ குறைக்க சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா.... எப்படிப் பட்ட உணவுகள், மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

உயர் ரத்த அழுத்தம் என நீங்கள் குறிப்பிடுவது எந்த அளவு என்பதில் முதலில் உங்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தின் சாதாரண அளவு என்பது 120/80. இது 140-ஐத் தாண்டும்போது அது உயர் ரத்த அழுத்தமாகக் கருதப்படும்.

சித்த மருத்துவத்தில் வாத தேகி, பித்த தேகி, கப தேகி என்பதைப் பார்ப்பார்கள்.  அதன் அடிப்படையில்தான் உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.  குருதி அழல் சூரணம், சர்ப்பகந்தா சூரணம், வெண்தாமரை சூரணம், மருதம்பட்டை சூரணம் என உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகள் உள்ளன.  வாத, பித்த, கப தேகியைப் பார்த்தபிறகு, இவற்றில் யாருக்கு, எந்த மருந்து சரியாக இருக்கும் என சித்த மருத்துவர் முடிவு செய்வார். 

 மருந்துகள் மட்டுமன்றி,  சில யோக முறைகளையும் தியான முறைகளையும், உணவு முறைகளையும் சித்த மருத்துவத்தில் பரிந்துரைப்போம்.  உயர் ரத்த அழுத்தம் என்பது பித்த ஆதிக்க நோயில் வரக்கூடியது. அதாவது  பித்தத்தை அதிகரிக்கும் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றை இவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும்.  இரவில் 6 முதல் 7 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும். தூக்கமின்மையால் பித்தம் அதிகரிக்கும். பித்தம் அதிகரித்தால் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். 

உணர்வுகளைக் கட்டுப்படுத்த எளிமையான தியான முறைகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

கோபம், துக்கம், ஸ்ட்ரெஸ் என உணர்வுரீதியான பாதிப்புகளும் இருக்கக்கூடாது. இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த எளிமையான தியான முறைகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.  பித்தம் அதிகமுள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்ற செயல்பாட்டிலும் பிரச்னை இருக்கலாம்.  அதனால் வயிறு தொடர்பான செரிமான பிரச்னைகள் இருக்கலாம். வயிற்றுப் பிரச்னைகளை ரத்த அழுத்தத்தோடு பெரும்பாலும் தொடர்புபடுத்திப் பார்க்க மாட்டார்கள்.  எனவே,  உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

எளிதில் செரிக்கக்கூடிய, எண்ணெய், கொலஸ்ட்ரால் இல்லாத உணவுகளைச் சாப்பிட வேண்டும். லவங்கம், ஏலக்காய், ஓமம், சீரகம் போன்றவற்றைச் சேர்த்த நீர் எடுத்துக்கொள்ளலாம்.  நடைப் பயிற்சியும் அவசியம். எலுமிச்சை, ஏலக்காய் சேர்த்த பானகம், வில்வ இலை சேர்த்த நீர் போன்றவை எல்லாம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.  இவையெல்லாம் பொதுவான பரிந்துரைகள். எனவே, உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக உணர்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு, உணவுப்பழக்கத்திலும் கவனம் செலுத்தும்போது முழுமையான பலன்களை அடையலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...