Skip to main content

Doctor Vikatan: High BP-ஐ குறைக்க சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா.... எப்படிப் பட்ட உணவுகள், மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

உயர் ரத்த அழுத்தம் என நீங்கள் குறிப்பிடுவது எந்த அளவு என்பதில் முதலில் உங்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தின் சாதாரண அளவு என்பது 120/80. இது 140-ஐத் தாண்டும்போது அது உயர் ரத்த அழுத்தமாகக் கருதப்படும்.

சித்த மருத்துவத்தில் வாத தேகி, பித்த தேகி, கப தேகி என்பதைப் பார்ப்பார்கள்.  அதன் அடிப்படையில்தான் உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.  குருதி அழல் சூரணம், சர்ப்பகந்தா சூரணம், வெண்தாமரை சூரணம், மருதம்பட்டை சூரணம் என உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகள் உள்ளன.  வாத, பித்த, கப தேகியைப் பார்த்தபிறகு, இவற்றில் யாருக்கு, எந்த மருந்து சரியாக இருக்கும் என சித்த மருத்துவர் முடிவு செய்வார். 

 மருந்துகள் மட்டுமன்றி,  சில யோக முறைகளையும் தியான முறைகளையும், உணவு முறைகளையும் சித்த மருத்துவத்தில் பரிந்துரைப்போம்.  உயர் ரத்த அழுத்தம் என்பது பித்த ஆதிக்க நோயில் வரக்கூடியது. அதாவது  பித்தத்தை அதிகரிக்கும் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றை இவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும்.  இரவில் 6 முதல் 7 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும். தூக்கமின்மையால் பித்தம் அதிகரிக்கும். பித்தம் அதிகரித்தால் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். 

உணர்வுகளைக் கட்டுப்படுத்த எளிமையான தியான முறைகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

கோபம், துக்கம், ஸ்ட்ரெஸ் என உணர்வுரீதியான பாதிப்புகளும் இருக்கக்கூடாது. இந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த எளிமையான தியான முறைகளையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும்.  பித்தம் அதிகமுள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்ற செயல்பாட்டிலும் பிரச்னை இருக்கலாம்.  அதனால் வயிறு தொடர்பான செரிமான பிரச்னைகள் இருக்கலாம். வயிற்றுப் பிரச்னைகளை ரத்த அழுத்தத்தோடு பெரும்பாலும் தொடர்புபடுத்திப் பார்க்க மாட்டார்கள்.  எனவே,  உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

எளிதில் செரிக்கக்கூடிய, எண்ணெய், கொலஸ்ட்ரால் இல்லாத உணவுகளைச் சாப்பிட வேண்டும். லவங்கம், ஏலக்காய், ஓமம், சீரகம் போன்றவற்றைச் சேர்த்த நீர் எடுத்துக்கொள்ளலாம்.  நடைப் பயிற்சியும் அவசியம். எலுமிச்சை, ஏலக்காய் சேர்த்த பானகம், வில்வ இலை சேர்த்த நீர் போன்றவை எல்லாம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.  இவையெல்லாம் பொதுவான பரிந்துரைகள். எனவே, உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக உணர்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு, உணவுப்பழக்கத்திலும் கவனம் செலுத்தும்போது முழுமையான பலன்களை அடையலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...