Skip to main content

Doctor Vikatan: கர்ப்பகால கால் வீக்கம்; சாதாரணமானதா... பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுவது ஏன்... அது உடலில் உப்பு சேர்வதன் அடையாளமா  அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படுவதா... கால் வீக்கத்துக்கு சிகிச்சைகள் எடுக்க வேண்டுமா? 

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் என்பது இயல்பான விஷயம்தான். கருவிலுள்ள குழந்தைக்கு ஆரம்ப நாள்களில்  தாயிடமிருந்துதான் ரத்த ஓட்டம் செல்ல வேண்டியிருக்கும்.  அதனால் ரத்தத்தின் அளவு அதிகமாகும்.

ரத்த ஓட்ட அளவு அதிகரிப்பதன் விளைவாக, கர்ப்பிணிகளுக்கு உடலில், குறிப்பாக கால்களில் அதிக அளவில் நீர் கோத்துக்கொள்ளும். அதனால் கால்களில் வீக்கம் ஏற்படுவதும் இயல்பாகவே நடக்கும்.  கர்ப்ப காலத்தில்  கால் வீக்கம் உள்ள பெண்கள், கால்களில் வலி இல்லாதவரை அது குறித்து பயப்படத் தேவையில்லை.  கர்ப்பிணிகளுக்கு கர்ப்பத்தின் 12-வது  அல்லது 13-வது வாரங்களில் கால்கள் வீங்க ஆரம்பிக்கும்.  28 வாரங்களில், அதாவது கர்ப்பத்தின் 7-வது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருக்கும்.  

கர்ப்பத்தில் ஒரு குழந்தைதான் இருக்கிறது, ரத்த அழுத்தம் இல்லை என்ற நிலையில், கால் வீக்கம் இருந்தால், அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அதுவே ஒரு காலில் மட்டும்தான் வீக்கம் இருக்கிறது, இன்னொரு கால் நார்மலாக இருக்கிறது, வீக்கமுள்ள காலில் வலியும் இருக்கிறது என்றால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  வீக்கமுள்ள காலில் ரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கர்ப்பகால கால் வீக்கம்

ட்வின்ஸ் அல்லது ட்ரிப்லெட்ஸ் என ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு கால் வீக்கம் என்பது நார்மலானதுதான்.  எப்படிப்பட்ட கால் வீக்கமும் ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படவில்லை என்றால் பொறுத்திருந்து பார்க்கலாம்.  அதுவே, கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தால், அவரது உடலிலிருந்து அதிக அளவிலான புரதச்சத்து வெளியேறுவதாக அர்த்தம். அந்நிலையில் அவர்கள் மருத்துவரை அணுகி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.   வேலை நிமித்தம் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் கால் வீக்கம் வரலாம். அவர்கள் இரவு தூங்கும்போது கால்களுக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொண்டு படுத்தால், வீக்கம்  வடியத் தொடங்கும்.  வேலையிடத்தில் கால்களைத் தொங்கவிட்டபடி அமராமல் சின்ன ஸ்டூல் வைத்து அதில் கால்களை வைத்தபடி உட்கார்ந்தால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.

கால் வீக்கமானது கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தால் பிரச்னையில்லை. திடீரென ஏற்பட்டால்தான்  அலெர்ட் ஆக வேண்டும். உடல் முழுவதும் வீங்கினாலோ, முகம் வீங்கினாலோ, உடைகள் டைட் ஆனாலோ அதெல்லாம் அசாதாரண அறிகுறிகள் என உணர வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண் உடலில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அது கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால் எந்த அறிகுறியையும் அலட்சியம் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...