Skip to main content

Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan: அடிக்கடி முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், முருங்கைக்கீரை பொடியை வைத்துச் செய்யப்படுகிற மாத்திரைகளை, கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ளலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறதே... அது எந்த அளவுக்கு நம்பகமானது...? அவ்வளவு சிறிய மாத்திரையில் முருங்கைக்கீரையில் உள்ள சத்து முழுமையாகக் கிடைத்துவிடுமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கீரை வகைகளைப் பொறுத்தவரை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறந்தது. முருங்கைக்கீரைக்கு மட்டுமல்ல, எல்லா கீரை, காய்கறிகளுக்கும் இது பொருந்தும்.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அடிக்கடி கீரைகளை வாங்கிச் சமைத்துச் சாப்பிட முடியாதவர்கள், கீரைகளை உலரவைத்துச் செய்த பொடியை எடுத்துக்கொள்ளலாம். மாத்திரைகளாக, கேப்ஸ்யூலாக எடுக்கும்போது அது உடலில் கரைவதில் பிரச்னையிருக்காது. ஆனாலும், கீரைகளை ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுவதுதான் சிறந்தது.

கீரைகளைப் பொடிகளாகப் பயன்படுத்தும்போது அதன் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம்.  முருங்கைக்கீரையைப் பொறுத்தவரை அந்தக் கீரை கிடைப்பதில் பிரச்னையில்லை என்பதால் பெரும்பாலும் அதைத்தான் கலந்திருப்பார்கள். இருந்தாலும் அவை விற்பனை செய்யப்படுகிற இடம், அந்தப் பொருளின் தரம் போன்றவற்றையும் பார்க்க வேண்டியது அவசியம். முருங்கைக்கீரையைப் போலவே மற்ற கீரைகளின் பொடிகளையோ, வேறு மூலிகைகளையோ இப்படி வாங்கும்போது அவற்றில் மலிவான மாற்றுப்பொருள்களைக் கலக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

கீரைப்பொடி

சைவ உணவுக்காரர்கள் வற்றல் பயன்படுத்துவது போல, அசைவ உணவுக்காரர்கள் மீன்கள் கிடைக்காத சீசனில் கருவாடு போன்ற வடிவத்தில் எடுத்துக்கொள்வதுபோலத்தான் கீரைகளைப் பொடியாகப் பயன்படுத்துவதும். காலத்துக்கேற்றபடி எப்போதாவது பயன்படுத்துவதில் தவறில்லை. மற்றபடி முருங்கைக்கீரையை சூப்பாகவோ, பருப்பு சேர்த்துக் கடைந்தோ சாப்பிடுவதுதான் சிறந்த பலன்களைத் தரும். இது எல்லாக் கீரைகளுக்கும் பொருந்தும். பொடியாகவோ, கேப்ஸ்யூலாகவோ எடுத்துக்கொள்ளும்போது முழுமையான பலன் கிடைக்காது.

'கீரைகள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் பலன் முழுமையாகக் கிடைக்காது, அதனால் அதே பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை, கேப்ஸ்யூல்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்' என்ற கருத்தும் பலருக்கு உண்டு. நீங்கள் எடுத்துக்கொள்கிற காய்கறி, கீரைகளிலிருந்து அவற்றின் சத்துகள் நிச்சயம் கிடைக்கும். அளவோடு எடுத்துக்கொள்ளும்போது அதனதன் பலன் நிச்சயம் உடலில் சேரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...