Skip to main content

Doctor Vikatan: மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் அந்தரங்க உறுப்பு அலர்ஜி... தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 28. எனக்கு பீரியட்ஸ் நாள்களில் நாப்கின் உபயோகிப்பதால் அந்தரங்க உறுப்பைச் சுற்றிலும் அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்லும் நிலையில் இது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து மீள ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

செல்வி ராஜேந்திரன்

பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் இந்த வகை அலர்ஜிக்கு கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் (Contact Dermatitis) என்று பெயர். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின் உங்கள் அந்தரங்க உறுப்பு சருமத்தில் படுவதால் இந்த அலர்ஜி ஏற்படும்.

நாப்கினில் உள்ள பசை, பெர்ஃபியூம், மேல் லேயரில் உள்ள பாலிஓலிஃபின்  (Polyolefin) எனப்படும் கெமிக்கல் போன்றவை சருமத்தை உறுத்தி, அதன் விளைவாக அரிப்பு ஏற்படலாம். தவிர பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பைச் சுற்றி சூடு, ஈரப்பதம் போன்றவை இருக்கும். அதனால் அதிகம் வியர்க்கும். நம் உடலில் இயல்பிலேயே பாக்டீரியா கிருமிகள் இருக்கும்.

பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள ஈரப்பதம் மற்றும் சூட்டின் காரணமாக அந்த பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும். அந்த நாள்களில் நாப்கின் வைத்துக்கொண்டு நடக்கும்போது அது தொடைகளில் உராய்ந்து அதன் விளைவாகவும் அரிப்பை உண்டுபண்ணலாம். அந்தப் பகுதியில் உள்ள சருமம் ஏற்கெனவே ரொம்பவும் சென்சிட்டிவ்வாக இருக்கும். இந்தப் பிரச்னையும் சேரும்போது, அதை கவனிக்காமல் விட்டால் அரிப்புடன் வீக்கம், சருமம் சிவந்து தடித்துப்போவது போன்றவையும் சேர்ந்துகொள்ளலாம். 

menstrual cup

நீங்கள்  உபயோகிக்கும் நாப்கின் தரமானதா என்று பாருங்கள்.   அதில் வாசனை, பசை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தளர்வான, காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது முக்கியம். ப்ளீடிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்ற வேண்டும். அரிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால், சரும மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் பிரச்னையைப் பார்த்துவிட்டு அதற்கேற்ப, மாத்திரைகள், ஆயின்மென்ட் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.

ஒருவேளை உங்களுக்கு நாப்கின் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மென்ஸ்டுரல் கப் உபயோகிக்கவும் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...