Skip to main content

Doctor Vikatan: டயட், உடற்பயிற்சிகளைத் தொடரும்போதும் திடீரென நின்றுபோன weightloss.. ஏன்?

Doctor Vikatan: என் வயது 38. நான் உடல் எடையைக் குறைப்பதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜிம்மில் சேர்ந்தேன். முதல் சில மாதங்களில் எடை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அது அப்படியே நின்றுவிட்டது. எடை அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. அதே உடற்பயிற்சிகளையும் உணவுப்பழக்கத்தையும்தான் பின்பற்றி வருகிறேன்.  ஆனாலும், திடீரென எடைக்குறைப்பு  நின்று போனது ஏன்... மீண்டும் எடை குறையச் செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். 

ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கியவர்களுக்கு முதல் சில மாதங்களில் உடல் எடை நன்கு குறையும். திடீரென ஒரு கட்டத்தில் அது கூடவோ, குறையவோ செய்யாமல் அப்படியே நின்றுவிடும். 'அதே வொர்க் அவுட்டையும் டயட்டையும் ஃபாலோ பண்றேன்... ஆனாலும், வெயிட் குறையாம அப்படியே நிக்குதே...' என்று புலம்புவார்கள். இதை 'வெயிட்லாஸ் ப்ளாட்டோ' ( Weight loss plateau ) என்று சொல்கிறோம்.

வெயிட்லாஸ்  ப்ளாட்டோ நிலையை எப்படித் தகர்ப்பது என்பது வெயிட்லாஸ் முயற்சியில் உள்ள பலரின் கவலையாகவும் சவாலாகவும் இருக்கும். முதல் வேலையாக, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டை சேர்த்துக்கொள்ளுங்கள். வேகவைத்த கார்ன், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேக வைத்த சன்னா அல்லது ராஜ்மா, ஒரு கப்  வேகவைத்த கேரட் அல்லது பீட்ரூட் அல்லது பட்டாணி, வீட்டிலேயே தயாரித்த பிரியாணி  போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முதல் 3-4 நாள்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். 

நின்றுபோன weightloss

கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளையும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடும்போது உங்கள் உடல் எடையில் மாற்றத்தைப் பார்ப்பீர்கள். 3 - 4 நாள்களுக்கு  எண்ணெயே  இல்லாத  உணவுகளைச் சாப்பிடலாம். ஆவியில் வேகவைத்த காய்கறிகள், ஃப்ரெஷ் பழங்கள், மோர், இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது எண்ணெய், உப்பு, மசாலா என எல்லாமே தவிர்க்கப்படும். அதன் விளைவாக உங்கள் வெயிட்லாஸ் பிளாட்டோ நிலை தகரும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுக்கு நிறைய பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட நேரத்தில் பசியெடுக்கும்போது மோர் குடிக்கலாம். தயிரில் புதினா- கொத்தமல்லி சட்னி கலந்து சாப்பிடலாம். தயிர் பச்சடி சாப்பிடலாம்.  இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள். குறையாமல் அப்படியே இருந்த உடல் எடை, நிச்சயம் குறையத் தொடங்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...