Skip to main content

Doctor Vikatan: நத்தையிலிருந்து தயாரிக்கப்படும் snail mucin சீரம்... Glass skin தருமா?

Doctor Vikatan: என்னுடைய வெளிநாட்டுத் தோழி, தன் சரும அழகைப் பராமரிக்க நத்தையிலிருந்து எடுக்கப்படும் ஸ்னெயில் மியூசின் (snail mucin serum) சீரம் பயன்படுத்துவதாகச் சொல்கிறாள். அது இப்போது இந்தியாவிலும் பரவலாகக் கிடைக்கிறது என்கிறாள். ஸ்னெயில் மியூசின் சீரம் உண்மையிலேயே சரும அழகை மேம்படுத்துமா... கொரியன் பெண்களின் கண்ணாடி சருமத்துக்கு அதுதான் காரணம் என்பது உண்மையா? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா 

சருமநல மருத்துவர் பூர்ணிமா

ஸ்னெயில் மியூசின் (snail mucin serum) சீரம்  என்பது சருமத்துக்கு அதிகபட்ச ஹைட்ரேஷனை,  கொடுக்கக்கூடியது. ஹைலுரானிக் ஆசிட் போன்று  செயல்படக்கூடிய இது, சருமத்தின் நீர்த்துவத்தை அதிக அளவில் தக்கவைக்க உதவக்கூடியது. அதாவது ஒரு ஸ்பான்ஜ் போன்று செயல்பட்டு சருமத்தின் நீர்த்துவத்தைத் தக்கவைக்கும்.

கொரியன் ஸ்கின்கேர் தயாரிப்புகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் பலன் தருமா என்றால் நிச்சயம் தரும்.  அதே சமயம், சரும அழகைப் பராமரிக்க இது மட்டும்தான் சரியான சாய்ஸா என்றால் நிச்சயம் இல்லை. அதாவது இது சருமத்துக்கு நல்லதுதான்... ஆனால், இது அவசியம் என்பதும் கிடையாது. இந்த ஸ்னெயில் மியூசின் சீரம் தயாரிக்க, ஏராளமான நத்தைகள் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதையும் யோசிக்க வேண்டும்.

ஸ்னெயில் மியூசினைவிடவும் சிறந்த சீரம்கள், செராமைட்ஸ், மாய்ஸ்ச்சரைசர், தயாரிப்புகள் எத்தனையோ உள்ளன. எனவே, உங்கள் தோழி சொன்னதற்காக இதைத் தேடிப்பிடித்து வாங்கிப் பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற அளவுக்கு இது அவசியமான ஒன்று கிடையாது. உபயோகிப்பதில் தவறும் இல்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கொரியன் பெண்களைப் போல நம்மூர்ப் பெண்களுக்கு கண்ணாடி போன்ற சருமம் பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை.

கொரியன் கிளாஸ் ஸ்கின்

கொரியன் ஸ்கின் கேரில் ஹெவியான மாய்ஸ்ச்சரைசர்கள் பயன்படுத்துவார்கள். விளக்கெண்ணெய் எவ்வளவு அடர்த்தியாக இருக்குமோ, அதைப் போன்ற  அடர்த்தியான  மாய்ஸ்ச்சரைசர்கள் பயன்படுத்துவார்கள். அவர்களுடைய சருமத்தின் தன்மைக்கு அவை பொருந்திவிடும். அதே பொருள்களை நாம் பயன்படுத்தினால், அடுத்த நாளே பருக்கள் வந்துவிடும். பொரிப் பொரியாக வரும்.

எனவே, ஸ்னெயில் மியூசின் உள்பட எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் கொரியன் பெண்களைப் போன்ற கண்ணாடி சருமம் பெற வாய்ப்பில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...