Skip to main content

Health: 'செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஏன் கலர் கலராக இருக்கு?' - சித்த மருத்துவர் சொல்லும் விளக்கம்

செக்கில் ஆட்டிய எண்ணெய்களில்தான் நம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிற, ஆரோக்கியம் சார்ந்த தெளிவும் நம்பிக்கையும் பலருக்கும் வந்துவிட்டது. அதே நேரம், சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருக்கிற நல்லெண்ணெய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால், ஏன் அவை அப்படி இருக்கின்றன... அவற்றில் எது ’நல்ல’ எண்ணெய் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அதற்கான விளக்கத்தைத் தருகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

எண்ணெய்

’’மரச்செக்கில் எள்ளைப்போட்டு ஆட்டி, நல்லெண்ணெய் எடுக்கும்போது அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்ப்பார்கள். கரும்பு வெல்லம் சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய் லேசான நிறத்துடனும், கருப்பட்டி சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய் அடர்ந்த நிறத்துடனும் இருக்கும். தவிர, கரும்பு வெல்லத்தின் நிறம் எப்போதும் ஒன்றுபோல இருக்காது. இதன் காரணமாகவும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நிறத்தில் ஒன்றுபோல இருக்காது. மற்றபடி, அந்த நல்லெண்ணெய்கள் எல்லாமே நல்லவைதான்.

இன்னும் சிலர், 'செக்கு எண்ணெய்யின் அடியில் கருப்பாக ஏதோ தங்கி இருக்கிறதே... அது என்ன டாக்டர்?' என்று கேட்கிறார்கள்.

மரச்செக்கில் எள்ளை ஆட்டும்போது அதனுடன் வெல்லத்தையோ அல்லது கருப்பட்டியையோ சேர்ப்பார்கள் என்று சொன்னேன் இல்லையா... அப்படி ஆட்டிய எண்ணெய்யை வடித்து எடுத்த பிறகும், அதனுடைய வீழ் படிவு கொஞ்சம்போல எண்ணெய்யின் அடியில் தேங்கி நிற்கும். அதுதான்  பார்ப்பவர்களுடைய கண்ணுக்குக் கருப்பாகத் தெரிவது. இந்த எண்ணெய்யைச் சாப்பிடுவதாலோ, சமையலுக்குப் பயன்படுத்துவதாலோ நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. இதை எந்த அடிப்படையில் சொல்கிறேன் என்றால், நல்லெண்ணெய்யை ஆட்டி எடுத்த பிறகு, அதில் கிடைக்கும் எள்ளு புண்ணாக்கைச் சிறு வயதில் நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். அதனால் நமக்கு எந்தக் கெடுதலும் வரவில்லையே... அது ருசியாக இருந்தது, கூடவே இரும்புச்சத்தையும் நம் உடம்பில் சேர்த்தது. அதனால், செக்கிலாட்டிய நல்லெண்ணெய்யில் அடியில் கருப்பாக இருக்கிறது என்றால் பயப்படாமல் வாங்கலாம். இன்னமும் தயங்குபவர்கள் வெள்ளை வேட்டியில் அந்த நல்லெண்ணெய்யை வடிகட்டிப் பயன்படுத்தலாம். 

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

கூடுதலாக இன்னொரு தகவல். பலரும், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யைக்கூட ரீஃபைண்ட் செய்யப்பட்டதாக வாங்குகிறார்கள். அது சம்பந்தப்பட்டவர்களுடைய விருப்பம் என்றாலும், அது அவசியமில்லை என்பதே என்னுடைய கருத்து. இதனால், சில நுண்ணூட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது." என்கிறார், மருத்துவர் செல்வ சண்முகம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...