Skip to main content

Health: தினமும் தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா?

ரு காலத்துல காலேஜ் போற பசங்கதான், முடி ஸ்டைலா காத்துல பறக்கணும்னு தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டாங்க. ஆனா, இன்னிக்கு ஸ்கூல் போற பொடிசுங்ககூட தலைக்கு எண்ணெய் வைக்கப்போனா தடுக்குதுங்க. 'போம்மா, முகத்துல எண்ணெய் வழியும்'னு சண்டைக்கு வருதுங்க. சரி, தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா, அதுவும் தினமும் வைக்கணுமா, அப்படி வைக்கலைன்னா என்ன பிரச்னைகள் வரும்னு இயற்கை மருத்துவர் தீபா அவர்களிடம் கேட்டோம்.

''நம்ம தலையில இயற்கையாவே ஒரு சீபம் சுரக்கும். அது தலை சருமத்தை ஈரப்பதத்தோட பார்த்துக்கும். சில நாள் கழிச்சு அது அப்படியே உலர்ந்து தலையில படியும். இந்த இறந்த செல்களை நீக்குறதுக்குத்தான் வாரத்துக்கு ரெண்டு நாள் தலைக்குக் குளிக்கணும்னு சொல்றோம்.

Hair care

எண்ணெய் வெச்சே ஆகணுமா?

தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா என்றால், கண்டிப்பா வைக்கணும். தலையில் எண்ணெய் வைக்கும்போது, அதில் இருக்கிற புரோட்டீனும் கொழுப்பும் முடியோட உள்பகுதி வரைக்கும் போகும். தலையில எண்ணெய் எப்படி வைக்கணும் தெரியுமா? இடது கையில கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதை வலது கை விரல்களின் நுனியால தொட்டு, தலை சருமத்துல நல்லா படுற மாதிரி வைக்கணும். அப்போ தான், முடியோட வேர்க்கால்கள் வரைக்கும் எண்ணெய் போய், முடி வலுவாகும்.

யார் தினமும் வைக்கணும்?

முடி நல்லா அடர்த்தியா இருக்கிறவங்க, தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கணும். அடர்த்தியே இல்லாம இருந்தா, அவங்க வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும், ராத்திரியில எண்ணெய் வெச்சு, தலை சருமத்துல நல்லா மசாஜ் கொடுக்கணும். இப்படி செஞ்சா, தலையில இருக்கிற இறந்த செல்கள் வெளியேறி ரத்த ஓட்டம் அதிகமாகி, முடியோட வேர்க்கால்கள் வலுவாகும்.

இயற்கை மருத்துவர் யோ. தீபா

எண்ணெயே வைக்கலைன்னா என்னவாகும்?

சிலருக்கு தலை பூரா கொப்புளம் கொப்புளமா இருக்கு. தலையில இருந்து வெள்ளை வெள்ளையா உதிரும். இதுக்கு காரணம் உடம்பு சூடாகுறதுதான். உடம்பு சூடாகுறதுக்கு முதல் காரணம் தலையில் எண்ணெய் வைக்காததுதான். இரண்டாவது காரணம், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததுதான். இதை அப்படியே கவனிக்காம விட்டீங்கன்னா, உலர் பொடுகு வந்திடும். இது அப்படியே மெதுவா சொரியாசிஸ் ஆக மாறுறதுக்கும் வாய்ப்பிருக்கு. தவிர, முடி கொட்டும். முடியோட பளபளப்பு குறைய ஆரம்பிச்சிடும். நுனிகள்ல பிளவு ஏற்படும். உச்சந்தலையில் முடிகொட்டி சொட்டை விழுறதுக்கும் வாய்ப்பிருக்கு. இவற்றையெல்லாம் தடுக்கணும்னா தலைக்கு எண்ணெய் வெச்சுதான் ஆகணும்'' என்கிறார் டாக்டர் தீபா.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...