Skip to main content

Doctor Vikatan: வெளியில் கேட்கும் அளவுக்கு வயிற்றில் `கடமுடா' சத்தம்... பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வயிற்றில் ஒருவித 'கடமுடா' சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் இந்தச் சத்தம் வெளியில் கேட்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... இதை சரியாக்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர்  வினோத்குமார்.

இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்

வயிற்றில் கேட்கும் இந்தச் சத்தம் இருவிதங்களில் உணரப்படலாம். ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போதோ, சும்மா இருக்கும்போதோ வயிற்றில்  அசைவுகளும், கடமுடா என்ற சத்தமும் கேட்கும். சிலர் இதை அவர்கள் மட்டும் உணர்வார்கள். இன்னும் சிலருக்கு இது வெளியிலும் கேட்கும். 

மருத்துவரிடம் இந்தப் பிரச்னையுடன் வரும்போது ஸ்டெதஸ்கோப் இல்லாமலேயே வெளியிலும் அந்தச் சத்தம் கேட்கும்.  குடலின் அசைவுகள் அதிகரிக்கும்போது  (increased intestine movements) இது போன்ற சத்தம் கேட்கும்.  சிலருக்கு வெறும் சத்தம் மட்டுமே கேட்கும். இன்னும் சிலருக்கு வயிற்றுப்போக்குடன் சேர்ந்து இந்தச் சத்தமும் வெளிப்படும். உணவு எடுத்துக்கொள்ளப் பிடிக்காமல் வாந்தி, வயிற்றுவலி போன்றவையும் ஏற்படலாம்.  வெறும் சத்தம் மட்டும் வருகிறது என்றால் அந்தப் பிரச்னையை சற்று கவனிக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வருகிறது என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். 

வயிற்றில் 'கடமுடா' சத்தம்

வயிற்றில் வாய்வு அதிகம் உருவாகும்போதும், சாப்பிடும்போதும் இப்படி வரும் வாய்ப்புகள் அதிகம். சிலவகை தொற்றுகளின் காரணமாக  குடல் இயக்கங்கள் அதிகரிக்கலாம்.  கிருமித்தொற்றின் காரணமாக வயிற்றில் சத்தமும் கூடவே வயிற்றுப்போக்கும் வரக்கூடும்.  சில வகை ஒவ்வாமை மற்றும் 'இரிட்டபுள் பவல் டிசீஸ்' (Irritable Bowel Disease) போன்றவற்றின் காரணமாகவும், குடல் இயக்கம் அதிகரித்து, இந்தப் பிரச்னை வரலாம்.  எனவே, உங்கள் விஷயத்தில் வெறும் வயிற்றுச் சத்தம்தான் பிரச்னை... மற்றபடி வயிற்றுவலியோ, வாந்தியோ, வயிற்றுப்போக்கோ, எடை இழப்போ இல்லை என்கிற பட்சத்தில் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவே அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...