Skip to main content

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா steam bath எனப்படும் நீராவிக்குளியல்?

Doctor Vikatan: நீராவிக்குளியல் எடுப்பது உண்மையிலேயே நல்லதா...  எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா.... அதனால் விரைவில் எடை குறையும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த   கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

தலத் சலீம்

தலை பாரமாக இருந்தாலோ, சளி பிடித்திருந்தாலோ வெந்நீரை சூடாக்கி, மருந்துகள் அல்லது மூலிகைகள் சேர்த்து ஆவி பிடிக்கிற வழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறி, தலை பாரம் நீங்கி, சுவாசப்பாதை சீராகிறது. ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக் குளியலும்  கிட்டத்தட்ட அப்படித்தான்.

ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக்குளியல், மிகப் பழைமையான மருத்துவ முறைகளில் இருந்திருக்கிறது.  அதாவது எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நீராவிக் குளியல் எடுப்பதை அவர்கள் வாழ்க்கை முறையாகவே பின்பற்றியிருக்கிறார்கள். சூடான நீராவியைப் பரவச் செய்வதன் மூலம், உடலிலுள்ள தேவையற்ற நீர், வியர்வையாக  வெளியேறும். ரத்த ஓட்டத்தை சீராக்குவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ரத்த அழுத்த அளவை சரியாக வைப்பது, வொர்க் அவுட்டுக்கு பிறகான உடல் களைப்பைப் போக்குவது, தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்துவது என இதன் பலன்கள் எக்கச்சக்கம்.

மிக முக்கியமாக, ஸ்ட்ரெஸ் குறைய ஸ்டீம் பாத் உதவுகிறது.  சில ஜிம்களில் ஸ்டீம் பாத் வசதியும் இருப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை ஸ்டீம் பாத் எடுப்பதன் மூலம், எடைக்குறைப்பும் துரிதமாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.  ஸ்டீம் பாத் எடுக்கும்போது உடலிலிருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறும். அதை ஈடுகட்டவும், உடலில் நீர் வறட்சி ஏற்படாமலிருக்கவும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம்.

steam bath

இத்தனை பலன்கள் இருந்தாலும், ஸ்டீம்பாத் எடுக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  எடைக்குறைப்புக்கு உதவும் என்பதற்காக அடிக்கடி இதைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் உடலில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஏதேனும் சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்டீம் பாத் எடுக்க வேண்டும். 

மருத்துவ சிகிச்சை மையங்களில் மூலிகைகளைப் பயன்படுத்தியும் ஸ்டீம் பாத் கொடுப்பார்கள். அது உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதிலிருந்து, மூட்டுவலி, உடல்வலி என பிரத்யேக பிரச்னைகளுக்கான சிகிச்சையாகவும் பரிந்துரைக்கப்படும். முறையான மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளும்போது ஸ்டீம் பாத் நல்ல சிகிச்சையாகவும்   பலனளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...