Skip to main content

Doctor Vikatan: ஓவர் ப்ளீடிங் பிரச்னைக்கு கர்ப்பப்பையைச் சுத்தம் செய்யும் D & C சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில வருடங்களாக எனக்கு பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக இருக்கிறது. டி அண்ட் சி எனப்படும் சிகிச்சையைச் செய்து கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறாள் என் தோழி.  டி அண்ட் சி என்பது கருவைக் கலைப்பதற்குச் செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ப்ளீடிங் பிரச்னைக்கும் அதைச் செய்யலாமா.... எல்லோரும் செய்து கொள்ளலாமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

சிலருக்கு மாதந்தோறும் பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக வெளியேறலாம். பீரியட்ஸ் சுழற்சியும் அவர்களுக்கு முறைதவறி இருக்கலாம்.  இன்னும் சிலருக்கு பீரியட்ஸ் சுழற்சி சரியாக இருந்தாலும், ப்ளீடிங் அதிகமாக இருக்கலாம்.  அதாவது, 10-12 நாள்கள்வரை கூட ப்ளீடிங் ஆகலாம். குறிப்பாக, 40- 45 வயதுப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் அவர்களுக்கு டி அண்ட் சி (Dilation and curettage) எனப்படும் சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.  டி அண்ட் சி என்பது கர்ப்பப்பையைச் சுரண்டி, சுத்தம் செய்கிற ஒருவித சிகிச்சை முறை.

குழந்தை பெறாத பெண்களுக்கும், குழந்தைக்கான முயற்சியில் இருப்போருக்கும், 40 வயதுக்கு குறைவானவர்களுக்கும் பெரும்பாலும் டி அண்ட் சி சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.  அவர்களுக்கெல்லாம் அந்தச் சிகிச்சை அவசியப்படாது.  மேற்குறிப்பிட்ட பெண்களுக்கு எல்லாம் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக பீரியட்ஸில் பிரச்னைகள் இருக்கலாம். எனவே, சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமாகவே அவர்களது பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். 

ப்ளீடிங்

சில பெண்களுக்கு அபார்ஷன் ஆகியிருக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் கரு கலைந்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் அந்தக் கருவை  மாத்திரைகள் வைத்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள் மருத்துவர்கள். கலைந்த கருவானது, அதில் முழுமையாக வெளியேறாத நிலையில், டி அண்ட் சி என்ற சிகிச்சை தேவைப்படலாம்.  மாத்திரை வைப்பதன் மூலமே அந்தக் கரு வெளியே வந்துவிடும். கடைசிகட்ட முயற்சியாகவே டி அண்ட் சி செய்யப்படும்.

இது போன்ற பெண்களுக்கு டி அண்ட் சி செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியாகச் செய்யாத பட்சத்தில், கர்ப்பப்பையில் சேதம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் அவர்கள் கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.  அதாவது டி அண்ட் சி முறையாகச் செய்யப்படாதபோது கர்ப்பப்பையின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, கர்ப்பம்  தரிப்பதை பாதிக்கலாம். பெரும்பாலும் மருத்துவர்கள் மிக கவனமாகவே இந்தச் சிகிச்சையைச் செய்வார்கள்.  45 வயதுப் பெண், அதிக ப்ளீடிங் பிரச்னைக்காகவோ, முறைதவறிய பீரியட்ஸ் பிரச்னைக்காகவோ மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவருக்கு ஹார்மோன் மாத்திரைகள்தான் பரிந்துரைப்போம். 

கர்ப்பப்பை

45 வயதுக்குப் பிறகு ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்க வேண்டுமானால், எண்டோமெட்ரியம் திசுவின் சாம்பிள் தேவைப்படும். ஹார்மோன் மருந்துகள் கொடுப்பதற்கு முன்பே, அந்தப் பெண்ணுக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  எனவே, இவரைப் போன்ற பெண்களுக்கு முதலில் டி அண்ட் சி செய்ய வேண்டியிருக்கும். டி அண்ட் சி என்பது, அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்படுகிற சிகிச்சை. இப்போதுள்ள நவீன மருத்துவத்தில், சிகிச்சை இன்னும் எளிதாகிவிட்டது. அதாவது பிப்பெல் பயாப்சி (pipelle biopsy) அல்லது எண்டோமெட்ரியம் சாம்ப்ளிங் என்ற டெக்னிக் பின்பற்றப்படுகிறது. இதில் சிறிய டியூப் போன்ற கருவியின் உதவியோடு, கர்ப்பப்பையின் சாம்பிளை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பலாம். இதற்கு மயக்க மருந்து தேவையில்லை... வலி இல்லாத எளிய சிகிச்சையும்கூட. எனவே, உங்கள் பிரச்னைக்கு மற்றவர் பேச்சைக் கேட்பதைத் தவிர்த்து மருத்துவரை அணுகி, தெளிவு பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...