Skip to main content

Doctor Vikatan: ஓவர் ப்ளீடிங் பிரச்னைக்கு கர்ப்பப்பையைச் சுத்தம் செய்யும் D & C சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில வருடங்களாக எனக்கு பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக இருக்கிறது. டி அண்ட் சி எனப்படும் சிகிச்சையைச் செய்து கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறாள் என் தோழி.  டி அண்ட் சி என்பது கருவைக் கலைப்பதற்குச் செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ப்ளீடிங் பிரச்னைக்கும் அதைச் செய்யலாமா.... எல்லோரும் செய்து கொள்ளலாமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

சிலருக்கு மாதந்தோறும் பீரியட்ஸின்போது ப்ளீடிங் அதிகமாக வெளியேறலாம். பீரியட்ஸ் சுழற்சியும் அவர்களுக்கு முறைதவறி இருக்கலாம்.  இன்னும் சிலருக்கு பீரியட்ஸ் சுழற்சி சரியாக இருந்தாலும், ப்ளீடிங் அதிகமாக இருக்கலாம்.  அதாவது, 10-12 நாள்கள்வரை கூட ப்ளீடிங் ஆகலாம். குறிப்பாக, 40- 45 வயதுப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் அவர்களுக்கு டி அண்ட் சி (Dilation and curettage) எனப்படும் சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.  டி அண்ட் சி என்பது கர்ப்பப்பையைச் சுரண்டி, சுத்தம் செய்கிற ஒருவித சிகிச்சை முறை.

குழந்தை பெறாத பெண்களுக்கும், குழந்தைக்கான முயற்சியில் இருப்போருக்கும், 40 வயதுக்கு குறைவானவர்களுக்கும் பெரும்பாலும் டி அண்ட் சி சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.  அவர்களுக்கெல்லாம் அந்தச் சிகிச்சை அவசியப்படாது.  மேற்குறிப்பிட்ட பெண்களுக்கு எல்லாம் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக பீரியட்ஸில் பிரச்னைகள் இருக்கலாம். எனவே, சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமாகவே அவர்களது பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். 

ப்ளீடிங்

சில பெண்களுக்கு அபார்ஷன் ஆகியிருக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் கரு கலைந்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் அந்தக் கருவை  மாத்திரைகள் வைத்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள் மருத்துவர்கள். கலைந்த கருவானது, அதில் முழுமையாக வெளியேறாத நிலையில், டி அண்ட் சி என்ற சிகிச்சை தேவைப்படலாம்.  மாத்திரை வைப்பதன் மூலமே அந்தக் கரு வெளியே வந்துவிடும். கடைசிகட்ட முயற்சியாகவே டி அண்ட் சி செய்யப்படும்.

இது போன்ற பெண்களுக்கு டி அண்ட் சி செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரியாகச் செய்யாத பட்சத்தில், கர்ப்பப்பையில் சேதம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் அவர்கள் கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.  அதாவது டி அண்ட் சி முறையாகச் செய்யப்படாதபோது கர்ப்பப்பையின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, கர்ப்பம்  தரிப்பதை பாதிக்கலாம். பெரும்பாலும் மருத்துவர்கள் மிக கவனமாகவே இந்தச் சிகிச்சையைச் செய்வார்கள்.  45 வயதுப் பெண், அதிக ப்ளீடிங் பிரச்னைக்காகவோ, முறைதவறிய பீரியட்ஸ் பிரச்னைக்காகவோ மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவருக்கு ஹார்மோன் மாத்திரைகள்தான் பரிந்துரைப்போம். 

கர்ப்பப்பை

45 வயதுக்குப் பிறகு ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்க வேண்டுமானால், எண்டோமெட்ரியம் திசுவின் சாம்பிள் தேவைப்படும். ஹார்மோன் மருந்துகள் கொடுப்பதற்கு முன்பே, அந்தப் பெண்ணுக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  எனவே, இவரைப் போன்ற பெண்களுக்கு முதலில் டி அண்ட் சி செய்ய வேண்டியிருக்கும். டி அண்ட் சி என்பது, அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்படுகிற சிகிச்சை. இப்போதுள்ள நவீன மருத்துவத்தில், சிகிச்சை இன்னும் எளிதாகிவிட்டது. அதாவது பிப்பெல் பயாப்சி (pipelle biopsy) அல்லது எண்டோமெட்ரியம் சாம்ப்ளிங் என்ற டெக்னிக் பின்பற்றப்படுகிறது. இதில் சிறிய டியூப் போன்ற கருவியின் உதவியோடு, கர்ப்பப்பையின் சாம்பிளை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பலாம். இதற்கு மயக்க மருந்து தேவையில்லை... வலி இல்லாத எளிய சிகிச்சையும்கூட. எனவே, உங்கள் பிரச்னைக்கு மற்றவர் பேச்சைக் கேட்பதைத் தவிர்த்து மருத்துவரை அணுகி, தெளிவு பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...