Skip to main content

Doctor Vikatan: பெரியவர்கள் baby soap, baby shampoo உபயோகிப்பது சரியா?

Doctor Vikatan:  சிலர் எத்தனை வயதானாலும் பேபி சோப், பேபி ஷாம்பூ, பேபி பவுடர் என குழந்தைகளுக்கான பொருள்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது சரியா.... பெரியவர்கள் பேபி புராடக்ட்ஸ் பயன்படுத்தலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா   

சருமநல மருத்துவர் பூர்ணிமா

நிறைய பேர் இந்த விஷயத்தைப் பின்பற்றுவதைப் பார்க்கலாம். குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான பொருள்களை பெரியவர்கள் உபயோகிப்பது சரியான விஷயமே இல்லை.

குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு பொருள்களின் தயாரிப்பே முற்றிலும் வித்தியாசமானது.  குழந்தைகளின் சருமம் மற்றும் கூந்தலின் தன்மை, அவர்களது பிஹெச் அளவு, அவர்களது சருமம் சுரக்கும் எண்ணெய்ப்பசையின் தன்மை என பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே அவர்களுக்கான  பொருள்கள்  தயாரிக்கப்படும். மிக முக்கியமாக, குழந்தைகளுக்கான பொருள்கள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்காதவையாக இருக்கும்படியும் பார்த்தே தயாரிக்கப்படும். அப்படிப்பட்ட பொருள்கள் பெரியவர்களின் சருமத்துக்கும் கூந்தலுக்கும் போதுமானவையாக இருக்காது.

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருக்கும்.  பெரியவர்களைப் போல அவர்களுக்கு அதீத சுத்தப்படுத்துதல் தேவைப்படாது. சுற்றுப்புற சூழல் மாசு தாக்கும் வாய்ப்புகளும் அவர்களுக்கு குறைவு. ஆனால், பெரியவர்களுக்கு சற்றே அதிகமான கிளென்சிங் தன்மை கொண்ட பொருள்கள் தேவைப்படும். அவை சற்று ஸ்ட்ராங்காக இருக்கலாம். 

baby soap

உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கான ஷாம்பூவை (Baby Shampoo) எடுத்துக்கொள்வோம்... கண்ணீரை வரவழைக்காமலிருக்க அதில் பிஹெச் அளவானது சற்று குறைவாகவே இருக்கும். அதனால் முடியானது சற்று வறட்சியாக மாறலாம். பெரியவர்கள் பேபி ஷாம்பூவை உபயோகித்துக் குளித்த பிறகு கூந்தல் வறண்டு போய்விடுவதை கவனிக்கலாம். அதற்கு இதுதான் காரணம். அதுவே பேபி பவுடர் என்பது குழந்தைகளுக்கே உபயோகிக்கக்கூடாதது. அதாவது குழந்தைகளுக்கு பவுடரே போடக்கூடாது.  அதிலுள்ள டால்க் மற்றும் சிலிகா துகள்கள் குழந்தைகளின் சுவாசப் பாதையை பாதிக்கும். நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், அவர்களுக்கு பவுடர் போடுவது நுரையீரலை பாதிக்கும். 

எனவே, குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மைல்டானவை என்றாலும் அவை பெரியவர்களுக்குப் பொருத்தமானவை என நினைத்து உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...