Skip to main content

Doctor Vikatan: பெரியவர்கள் baby soap, baby shampoo உபயோகிப்பது சரியா?

Doctor Vikatan:  சிலர் எத்தனை வயதானாலும் பேபி சோப், பேபி ஷாம்பூ, பேபி பவுடர் என குழந்தைகளுக்கான பொருள்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது சரியா.... பெரியவர்கள் பேபி புராடக்ட்ஸ் பயன்படுத்தலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா   

சருமநல மருத்துவர் பூர்ணிமா

நிறைய பேர் இந்த விஷயத்தைப் பின்பற்றுவதைப் பார்க்கலாம். குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான பொருள்களை பெரியவர்கள் உபயோகிப்பது சரியான விஷயமே இல்லை.

குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு பொருள்களின் தயாரிப்பே முற்றிலும் வித்தியாசமானது.  குழந்தைகளின் சருமம் மற்றும் கூந்தலின் தன்மை, அவர்களது பிஹெச் அளவு, அவர்களது சருமம் சுரக்கும் எண்ணெய்ப்பசையின் தன்மை என பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே அவர்களுக்கான  பொருள்கள்  தயாரிக்கப்படும். மிக முக்கியமாக, குழந்தைகளுக்கான பொருள்கள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்காதவையாக இருக்கும்படியும் பார்த்தே தயாரிக்கப்படும். அப்படிப்பட்ட பொருள்கள் பெரியவர்களின் சருமத்துக்கும் கூந்தலுக்கும் போதுமானவையாக இருக்காது.

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருக்கும்.  பெரியவர்களைப் போல அவர்களுக்கு அதீத சுத்தப்படுத்துதல் தேவைப்படாது. சுற்றுப்புற சூழல் மாசு தாக்கும் வாய்ப்புகளும் அவர்களுக்கு குறைவு. ஆனால், பெரியவர்களுக்கு சற்றே அதிகமான கிளென்சிங் தன்மை கொண்ட பொருள்கள் தேவைப்படும். அவை சற்று ஸ்ட்ராங்காக இருக்கலாம். 

baby soap

உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கான ஷாம்பூவை (Baby Shampoo) எடுத்துக்கொள்வோம்... கண்ணீரை வரவழைக்காமலிருக்க அதில் பிஹெச் அளவானது சற்று குறைவாகவே இருக்கும். அதனால் முடியானது சற்று வறட்சியாக மாறலாம். பெரியவர்கள் பேபி ஷாம்பூவை உபயோகித்துக் குளித்த பிறகு கூந்தல் வறண்டு போய்விடுவதை கவனிக்கலாம். அதற்கு இதுதான் காரணம். அதுவே பேபி பவுடர் என்பது குழந்தைகளுக்கே உபயோகிக்கக்கூடாதது. அதாவது குழந்தைகளுக்கு பவுடரே போடக்கூடாது.  அதிலுள்ள டால்க் மற்றும் சிலிகா துகள்கள் குழந்தைகளின் சுவாசப் பாதையை பாதிக்கும். நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், அவர்களுக்கு பவுடர் போடுவது நுரையீரலை பாதிக்கும். 

எனவே, குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மைல்டானவை என்றாலும் அவை பெரியவர்களுக்குப் பொருத்தமானவை என நினைத்து உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...