Skip to main content

Doctor Vikatan: நயன்தாரா பரிந்துரைத்த செம்பருத்தி டீ... BP, Sugar குறைக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: நடிகை நயன்தாரா சமீபத்தில் சோஷியல் மீடியாவில் செம்பருத்தி டீ குறித்த பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், செம்பருத்தி டீ அருந்துவதால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று சொல்லியிருந்தார். அலோபதி மருத்துவர் ஒருவர் அது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். செம்பரத்தை டீ என்பது உண்மையில் ஆரோக்கியமானதா... எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... அது BP, Sugar  அளவுகளைக் குறைக்கும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

மருத்துவர் விக்ரம்குமார்

இதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்மில் பலரும் செம்பருத்தி என்றே உச்சரிக்கிறோம். செம்பருத்தி என்பது பருத்திச் செடியைக் குறிக்கும். மலராக நாம் குறிப்பிடுவதை செம்பரத்தை என்று சொல்வதுதான் சரி. செம்பரத்தைக்கு (hibiscus) மருத்துவ குணங்கள் உண்டு என்பது உண்மைதான். அதற்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது என்று சித்த மருத்துவத்தில் ஒரு பாடல் குறிப்பு உள்ளது. அதாவது, ரத்த, பித்த பேதம் அகற்றும் என அகத்தியர் பாடல் குறிப்பு சொல்கிறது.

செம்பரத்தை (செம்பருத்தி) குறித்து நிறைய ஆய்வுகள்  நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சீரகம் சாப்பிட்டால் கூட ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சொல்வோரும் இருக்கிறார்கள். அந்த வகையில் செம்பரத்தை சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கும், குழந்தையின்மைக்கு காரணமாகும் என்றெல்லாம் சொல்லப்படுபவை தவறான தகவல்கள். எனவே, எல்லோருமே செம்பரத்தை டீ எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. அதே சமயம், இதை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும், சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் குறையும் என்பது போல  சில இன்ஃப்ளுயென்சர்கள் சொல்வது நிச்சயம் தவறான விஷயமே.

சித்த மருத்துவத்தில் மணப்பாகு என்பது மிகவும் பிரபலம். செம்பரத்ரதைப் பூக்களிலும் குடிநீர் தயாரித்து அதில் பனைவெல்லம் சேர்த்து மணப்பாகு தயாரிக்கப்படுகிறது. இதற்கு உடல் சூட்டையும், உடல் எரிச்சலையும் குறைக்கும் தன்மை உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதையும் ஒரு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.  பீரியட்ஸ பிரச்னை உள்ளவர்களுக்கும் இது உதவும்.

செம்பருத்தி டீ

ஒற்றை செம்பரத்தையின் இதழை பால் சேர்த்து எடுத்துக் கொண்டால் ரத்த நாளங்கள்  உறுதியாகும். இவை குறித்தெல்லாம் கிளினிகல் ஸ்டடி நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாரம்பர்யமாகப் பின்பற்றப்படும் இது போன்ற விஷயங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம், சோம்பு என ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு நாள் குடிநீராகத் தயாரித்து அருந்துவது போல செம்பரத்தையையும் ஒரு நாள் பயன்படுத்தலாம்.  அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் நடிகை நயன்தாரா சொல்லிவிட்டார் என்பதற்காக செம்பரத்தை டீ மட்டுமே சர்க்கரை அளவையோ ரத்த அழுத்தத்தையோ குறைத்து விடும் என்று நம்பி அதை மட்டுமே சிகிச்சையாகப் பின்பற்றுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...