Skip to main content

WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு... சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் - யார் இவர்?!

2010-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது, அமெரிக்கா ஊழல், மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியன் அஸாஞ்சே ஹேக் செய்து வெளியிட்டார். அது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க இராணுவத்தின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஒரு பத்திரிகையாளராகவே ஜூலியன் அஸாஞ்சே செயல்பட்டதாக ஒரு தரப்பினரும்,ஜூலியன் அஸாஞ்சே

அவரின் நடவடிக்கைகள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்பாடுகள், நாட்டின் சட்டங்களை மீறும் செயல் என மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இதற்கிடையில், அமெரிக்கா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதே நேரம் ஜூலியன் அஸாஞ்சே மீது பாலியல் தொடர்பான குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் 2012-ம் ஆண்டு லண்டனின் ஈக்வடார் தூதரகம் மூலம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தார்.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் அவர் மீது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்படக் கூடும் என ஈக்வடார் தூதரகம் அவருக்கு 2019 வரை அடைக்கலம் கொடுத்தது. அதன் பிறகு அவரை பிரிட்டிஷ் காவல்துறை, அமெரிக்காவை உளவு பார்த்தது, ரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தியது உள்ளிட்ட 17 குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்ததால், அவர் கடந்த 5 ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருந்தார்.ஜூலியன் அஸாஞ்சே

இந்த நிலையில், ஜூலியன் அஸாஞ்சே தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜூலியன் அஸாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

மேலும், ஆஸ்திரேலிய அரசுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, ஜூலியன் அஸாஞ்சேவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், ஜூலியன் அஸாஞ்சே தற்போது பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் செய்யப்பட்டிருக்கிறார்.ஜூலியன் அஸாஞ்சே

நாளை மதியம் அமெரிக்காவில் ஆஜராகவிருக்கும் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிரிட்டனின் லண்டன் சிறையில் 5 ஆண்டுகள் இருந்துவிட்ட நிலையில், அது இந்த தண்டனையிலிருந்து கழிக்கப்படும் எனக் கருதப்படுவதால், அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்வார் எனவும் கூறப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி


http://dlvr.it/T8kcZR

Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...