Skip to main content

WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு... சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் - யார் இவர்?!

2010-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது, அமெரிக்கா ஊழல், மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான ஆவணங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியன் அஸாஞ்சே ஹேக் செய்து வெளியிட்டார். அது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க இராணுவத்தின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஒரு பத்திரிகையாளராகவே ஜூலியன் அஸாஞ்சே செயல்பட்டதாக ஒரு தரப்பினரும்,ஜூலியன் அஸாஞ்சே

அவரின் நடவடிக்கைகள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் செயல்பாடுகள், நாட்டின் சட்டங்களை மீறும் செயல் என மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இதற்கிடையில், அமெரிக்கா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதே நேரம் ஜூலியன் அஸாஞ்சே மீது பாலியல் தொடர்பான குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் 2012-ம் ஆண்டு லண்டனின் ஈக்வடார் தூதரகம் மூலம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தார்.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் அவர் மீது மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்படக் கூடும் என ஈக்வடார் தூதரகம் அவருக்கு 2019 வரை அடைக்கலம் கொடுத்தது. அதன் பிறகு அவரை பிரிட்டிஷ் காவல்துறை, அமெரிக்காவை உளவு பார்த்தது, ரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தியது உள்ளிட்ட 17 குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்ததால், அவர் கடந்த 5 ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருந்தார்.ஜூலியன் அஸாஞ்சே

இந்த நிலையில், ஜூலியன் அஸாஞ்சே தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜூலியன் அஸாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

மேலும், ஆஸ்திரேலிய அரசுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு, ஜூலியன் அஸாஞ்சேவுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால், ஜூலியன் அஸாஞ்சே தற்போது பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் செய்யப்பட்டிருக்கிறார்.ஜூலியன் அஸாஞ்சே

நாளை மதியம் அமெரிக்காவில் ஆஜராகவிருக்கும் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிரிட்டனின் லண்டன் சிறையில் 5 ஆண்டுகள் இருந்துவிட்ட நிலையில், அது இந்த தண்டனையிலிருந்து கழிக்கப்படும் எனக் கருதப்படுவதால், அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்வார் எனவும் கூறப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி


http://dlvr.it/T8kcZR

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...