Skip to main content

Sex Dolls: மனிதர்களைப்போல பேசும், அசையும்... நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்!

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் எனப் பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது.

ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.Penis cancer: ``பிரச்னையைச் சொன்னால் ஜோக் அடிப்பார்கள்'' ஆபத்தாகும் ஆண்குறி புற்றுநோய்..!

தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்துகொள்ளவும் செய்கின்றன. 

இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பதுபோல் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதுபோன்ற அட்வான்ஸ் ரோபோட்களைத் தயாரிப்பதில் ஆரம்பத்தில் சில சவால்களை நிறுவனமும் இன்ஜினீயர்களும் எதிர்கொண்டுள்ளனர். அதன் பேட்டரி, மனிதர்கள் போன்ற வளைந்து கொடுக்கக்கூடிய தன்மைகள், அசைவுகள் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

இந்த பொம்மையைத் தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன் எடையை 40 கிலோவில் இருந்து 29 கிலோவாகக் குறைத்துள்ளனர். 2023 ஜூலை மாதம் பொம்மையை 172 சென்டி மீட்டர் உயரத்திலும், எடையை 29 கிலோவிலும் வடிவமைத்தனர்.

இந்த செக்ஸ் பொம்மைகளை எளிதாக வாங்கும் வகையில் அதன் விலையையும் குறைத்துள்ளனர். தற்போது இந்த பொம்மை 1.2 லட்சம் ரூபாய்க்கு (1,500 அமெரிக்க டாலர்) விற்கப்படுகிறது. அமெரிக்காவில் அபிஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இது போன்ற பொம்மைகள் 5 லட்சம் ரூபாய்க்கு (6,000 அமெரிக்க டாலர்) விற்கப்படுகின்றன.

ஆனால், இந்தப் பொம்மைகள் வெறும் பாலியல் தேவையைத் தாண்டி, 2025-ம் ஆண்டுக்குள் வீட்டு வேலைகளைச் செய்யும்படியும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக் கூடியவையாகவும், வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளவும் உருவாக்கப்பட உள்ளன. Love உடல் மசாஜ் செய்யும் கருவிகளை `செக்ஸ் டாய்ஸ்’ என வகைப்படுத்த முடியாது - மும்பை உயர் நீதிமன்றம்!

2030-ம் ஆண்டுக்குள், ஆபத்தான வேலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ரோபோக்கள் தயாரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.      

இது குறித்து ஸ்டார்பெர்ரியின் சிஇஓ இவான் கூறுகையில், ``பயனர்களுடன் உடல் ரீதியாகப் பேசவும், தொடர்புகொள்ளவும் கூடிய அடுத்த தலைமுறை செக்ஸ் பொம்மையை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் எங்கள் முன்மாதிரிகள் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதுதான் என்றாலும், இது பாதகத்தை ஏற்படுத்துவதாக பலர் மனம் வருந்தியுள்ளனர். இது போன்ற செக்ஸ் ரோபோக்கள் ஒருவரின் சம்மதமின்றி உறவு கொள்ளும் (consent) தீங்கான மனப்பான்மையை வலுப்படுத்தலாம். அதோடு உணர்ச்சி மற்றும் பாலியல் தேவைக்காக இவற்றை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உண்டாகி, பலர் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


http://dlvr.it/T8kzkL

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...