Skip to main content

Sex Dolls: மனிதர்களைப் போல பேசும், அசையும்... நிஜ அனுபவம் தரும் AI செக்ஸ் பொம்மைகள்!

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களின் வேலையை AI பறிக்கும் என பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கேற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. மனிதர்களின் வேலையை AI செய்தாலும் அது ஓர் இயந்திரமே என்ற நிலை இருந்தது.

ஆனால், இப்போது அது உணர்வுகளோடு கூடிய ஒரு ரோபோட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஷென்செனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்பெர்ரி டெக்னாலஜி (Starpery Technology) செக்ஸ் பொம்மைகளைத் (sex dolls) தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம்.

தற்போது இந்த நிறுவனத்தில் AI-ஆல் இயங்கும் செக்ஸ் ரோபோட் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் வழக்கமான செக்ஸ் பொம்மைகளைப்போல அல்லாமல், அட்வான்ஸ் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பேசவும், நகரவும், தொடுதலைப் புரிந்து கொள்ளவும் செய்கின்றன. 

இதனால் இந்த செக்ஸ் பொம்மைகளை வாங்குபவர்களுக்கு நிஜ அனுபவத்தைக் கொடுப்பது போல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற அட்வான்ஸ் ரோபோட்களை தயாரிப்பதில் ஆரம்பத்தில் சில சவால்களை நிறுவனமும், இன்ஜினீயர்களும் எதிர்கொண்டுள்ளனர். அதன் பேட்டரி, மனிதர்கள் போன்ற வளைந்து கொடுக்கக்கூடிய தன்மைகள், அசைவுகள் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

இந்த பொம்மையை தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன் எடையை 40 கிலோவில் இருந்து 29 கிலோவாக குறைத்துள்ளனர். 2023 ஜூலை மாதம் பொம்மையை 172 சென்டி மீட்டர் உயரத்திலும், எடையை 29 கிலோவிலும் வடிவமைத்தனர்.

இந்த செக்ஸ் பொம்மைகளை எளிதாக வாங்கும் வகையில் அதன் விலையையும் குறைத்துள்ளனர். தற்போது இந்த பொம்மை 1.2 லட்ச ரூபாய்க்கு (1,500 அமெரிக்க டாலர்) விற்கப்படுகிறது. அமெரிக்காவில் அபிஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இது போன்ற பொம்மைகள் 5 லட்ச ரூபாய்க்கு (6,000 அமெரிக்க டாலர்) விற்கப்படுகின்றன.

ஆனால், இந்த பொம்மைகள் வெறும் பாலியல் தேவையைத் தாண்டி, 2025-ம் ஆண்டுக்குள் வீட்டு வேலைகளைச் செய்யும்படியும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக் கூடியவையாகவும், வயதானவர்களை கவனித்துக்கொள்ளவும் உருவாக்கப்பட உள்ளன. 

Love

2030-ம் ஆண்டுக்குள், ஆபத்தான வேலைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ரோபோக்கள் தயாரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.      

இது குறித்து ஸ்டார்பெர்ரியின் சிஇஓ இவான் கூறுகையில், ``பயனர்களுடன் உடல் ரீதியாகப் பேசவும், தொடர்பு கொள்ளவும் கூடிய அடுத்த தலைமுறை செக்ஸ் பொம்மையை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் எங்கள் முன்மாதிரிகள் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி நல்லது தான் என்றாலும், இது பாதகத்தை ஏற்படுத்துவதாக பலர் மனம் வருந்தியுள்ளனர். இது போன்ற செக்ஸ் ரோபோக்கள் ஒருவரின் சம்மதமின்றி உறவு கொள்ளும் (consent) தீங்கான மனப்பான்மையை வலுப்படுத்தலாம். அதோடு உணர்ச்சி மற்றும் பாலியல் தேவைக்காக இவற்றை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உண்டாகி, பலர் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...