Skip to main content

Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார்.   இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது.  வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள்,  மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி (HbA1c ) பரிசோதனையில், ரத்தச் சர்க்கரையின் அளவானது 7-க்குள் இருக்கும் நிலையில்,  வாரம் இருமுறை இளநீர் குடிக்கலாம்.  அது இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்கும். அதுவே, ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இல்லை என்பவர்கள் நிச்சயம் இளநீர் குடிக்கவே கூடாது.

HbA1c

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.  இவர்கள் இளநீர் குடிக்கும்போது பொட்டாசியம் அளவு சட்டென அதிகரித்துவிடும் என்பதால் இளநீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இளநீரைப் போலவே அதன் உள்ளே உள்ள வழுக்கைப் பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. உதாரணத்துக்கு வயிற்றின் உள்பகுதியை ஆற்றும் தன்மை  கொண்டது என்பதால் செரிமான பிரச்னைகள் நீங்கும்.

டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர்வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு இல்லாத நிலையில் தினமும் 2 இளநீர் கூட குடிக்கலாம்.  உடற்பயிற்சி செய்வோர், காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். மற்றபடி உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் தினமும் ஒரு இளநீர் குடிக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...