Skip to main content

Vogue: உலகில் மிகச் சுவையாக சமைக்கும் பெண்கள் உள்ள 5 நாடுகள்... இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஒரு நல்ல உணவு வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிரப்பிவிடும்.

`இந்தப் பொழப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என பல உணவகங்களைத் தேடித் தேடி உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊர், இடம், கடையின் பெயர் என ஓர் உணவைச் சொன்னாலே அது இங்க தான் ஃபேமஸ் எனச் சொல்லும் மக்கள் இருக்கின்றனர். 

வெளியில் சாப்பிட்டாலும் வீடுகளில் செய்யப்படும் உணவுகள் தனிரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப பெண்கள் சமையல் செய்வதுண்டு.

இந்நிலையில் பிரபல வோக் (VOGUE) இதழானது, உலகின் எந்தெந்த நாடுகளில், பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 

உலகில் பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கும் முதல் ஐந்து நாடுகள்…

*இத்தாலி: இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இத்தாலி. இங்குள்ள பெண்கள் பாஸ்தா மற்றும் சாஸ்களில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கிறார்கள். 

Kaiseki

*ஜப்பான்: இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது. ஜப்பானிய பெண்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுகளைக் கலைநயத்தோடு காட்சிப்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள். சுஷி மற்றும் பாரம்பர்ய ஜப்பானிய இரவு உணவான கைசேகி (Kaiseki) தயாரிப்பதன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்கள்  

*மெக்சிகோ: மூன்றாவது இடத்தில் மெக்சிகோ இருக்கிறது. மெக்சிகன் பெண்கள் டாகோஸ் (tacos) மற்றும் மோல் (Mole) போன்ற உணவுகளில் உள்நாட்டு மசாலாக்கள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்திச் சமைக்கிறார்கள்.   

*பிரான்ஸ்: இரண்டாவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. பாரம்பர்ய முறைகளைப் பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக கோகோ வேன் மற்றும் நேர்த்தியான கேக்குகளை (pastries) தயாரிக்கின்றனர். 

*இந்தியா: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. உலகளவில் சிறந்த சமையல்காரர்களாக இந்திய பெண்கள் உள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் வித்தியாசமான முறைகளில் வித விதமான உணவுகளை பெண்கள் செய்கின்றனர்.   


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...