Skip to main content

Vogue: உலகில் மிகச் சுவையாக சமைக்கும் பெண்கள் உள்ள 5 நாடுகள்... இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஒரு நல்ல உணவு வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிரப்பிவிடும்.

`இந்தப் பொழப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என பல உணவகங்களைத் தேடித் தேடி உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊர், இடம், கடையின் பெயர் என ஓர் உணவைச் சொன்னாலே அது இங்க தான் ஃபேமஸ் எனச் சொல்லும் மக்கள் இருக்கின்றனர். 

வெளியில் சாப்பிட்டாலும் வீடுகளில் செய்யப்படும் உணவுகள் தனிரகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப பெண்கள் சமையல் செய்வதுண்டு.

இந்நிலையில் பிரபல வோக் (VOGUE) இதழானது, உலகின் எந்தெந்த நாடுகளில், பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 

உலகில் பெண்கள் மிகச் சுவையாகவும், அதிக வெரைட்டிகளிலும் சமைக்கும் முதல் ஐந்து நாடுகள்…

*இத்தாலி: இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இத்தாலி. இங்குள்ள பெண்கள் பாஸ்தா மற்றும் சாஸ்களில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கிறார்கள். 

Kaiseki

*ஜப்பான்: இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது. ஜப்பானிய பெண்கள் தாங்கள் தயாரிக்கும் உணவுகளைக் கலைநயத்தோடு காட்சிப்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள். சுஷி மற்றும் பாரம்பர்ய ஜப்பானிய இரவு உணவான கைசேகி (Kaiseki) தயாரிப்பதன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார்கள்  

*மெக்சிகோ: மூன்றாவது இடத்தில் மெக்சிகோ இருக்கிறது. மெக்சிகன் பெண்கள் டாகோஸ் (tacos) மற்றும் மோல் (Mole) போன்ற உணவுகளில் உள்நாட்டு மசாலாக்கள் மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்திச் சமைக்கிறார்கள்.   

*பிரான்ஸ்: இரண்டாவது இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. பாரம்பர்ய முறைகளைப் பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக கோகோ வேன் மற்றும் நேர்த்தியான கேக்குகளை (pastries) தயாரிக்கின்றனர். 

*இந்தியா: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியா. உலகளவில் சிறந்த சமையல்காரர்களாக இந்திய பெண்கள் உள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் வித்தியாசமான முறைகளில் வித விதமான உணவுகளை பெண்கள் செய்கின்றனர்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...