Skip to main content

Smoking: டீன் ஏஜ் பெண்களின் புகைப்பழக்கம் இருமடங்கு அதிகரிப்பு... மோசமான பிரச்னைகள் வரலாம்?!

`புகைபிடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்’… `புற்றுநோயை உருவாக்கும்’… எனக் கூறினாலும் `என் உடல், என் சுதந்திரம்’ எனப் புகைபிடிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். 

ஒருபுறம் இந்தியாவில் புகையிலையின் நுகர்வு குறைந்திருக்கிறது. இருந்தாலும், டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிப்பது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்திய புகையிலை கட்டுப்பாட்டு அறிக்கையில் கூறியுள்ளது.

சிகரெட் smoking

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் வயதான பெண்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டாலும், இளம் பருவத்தினரிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலில், 2009 மற்றும் 2019-க்கு இடையில் பதின்ம வயது பெண்களில் புகைபிடித்தல் 3.8 சதவிகித புள்ளிகள் உயர்ந்து 6.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது பெண்களில் அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது.

அதுவே பதின்ம வயது ஆண்களில் புகைபிடிக்கும் பழக்கம் 2.3 சதவிகித புள்ளிகள் அதிகரித்துள்ளது. பெரியவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம், ஆண்களில் 2.2 சதவிகித புள்ளிகளும், பெண்களில் 0.4 சதவிகிதமும் குறைந்துள்ளது.

*பதின்ம வயது பெண்கள் புகைபிடிக்க காரணம் என்ன? வேகமான முதிர்ச்சி, பதின்ம வயது ஆண்களைப் போலவே தங்கள் கோபத்திலிருந்து விடுபடவும், கூலாக தோன்றவும் பதின்ம வயது பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாக கூறப்படுகிறது. தங்களின் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு சிலர் பசியின் வேதனையிலிருந்து விடுபடும் வழியாகவும் புகைபிடிக்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இளம் பருவத்தினரிடையே பாலின இடைவெளி குறைந்து வருகிறது. 2019-ல் 7.4 சதவிகித பதின்ம பெண்கள் மற்றும் 9.4 சதவிகித பதின்ம ஆண்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். இளைஞர்களை புகைபிடிப்பதிலிருந்து வெளியேற்றுவதற்கான தலையீடுகள் செய்யப்படாவிட்டால், எதிர்காலத்தில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Pregnant woman

*என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

பொதுவாகவே புகைபிடிப்பதால் சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயங்கள் அதிகரிக்கின்றன. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது கருவுறுதலை (Fertility) பாதிக்கும்.

பெண்களில் கூடுதல் பாதிப்பாக சேதமடைந்த நுரையீரல் மற்றும் பிறவிக் குறைபாடுகளுடன் கூடிய குறைமாத குழந்தை பிறப்புகள் (premature births) ஏற்படுகின்றன. புகைபிடிக்கும் பழக்கத்தால் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.

புகைபிடிக்கும் பெண்களுக்கு 50 வயதிற்கு முன்பே மாதவிடாய் நின்று போகும் அபாயம் 43 சதவிகிதம் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...