Skip to main content

Iron Man கைகளைப் பெறும் 5 வயது சிறுவன்... மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை!

நியூயார்க்கின் லாங் ஐலேண்டை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோர்டன் மரோட்டா. இந்தச் சிறுவன் பிறக்கும்போதே இடது கையின்றி பிறந்திருக்கிறார். 

இந்தநிலையில் சிறுவனுக்கு மூளையின் கட்டளைக்கு இணங்கி இயற்கையாகச் செயல்படும் வகையில் அயன் மேன் தீமில் (bionic Hero Arm) மருத்துவர்கள் கையைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் உலகில் சிறிய வயதில் `பயோனிக் ஹீரோ ஆர்ம்' பெறும் நபர் என்ற பெருமையை ஜோர்டன் பெற்றுள்ளார்.

Jordan - Bionic Hero Arm

சிறுவனுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அயர்ன் மேன் என்பதால், இந்தக் கையை அப்படியே அச்சு அசலாக அயர்ன் மேன் திரைப்படத்தில் வரும் கைகளைப் போலவே சிவப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் வடிவமைத்துள்ளனர்.

சிறுவனின் இடது கை முடியும் இடத்திலிருந்து இந்தக் கை பொருத்தப்படுகிறது. கை தசைச் சுருக்கங்களைக் கண்டறிய மின்முனைகள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிதாக இந்தக் கையை இணைந்து பிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையை `நப்பி’ என்று குடும்பத்தினர் செல்லமாக அழைக்கின்றனர்.

இது பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை செயல்படும் என்று கூறுகின்றனர். பொதுவாகவே இந்த அட்வான்ஸ்டு செயற்கை கைகள் ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இருந்தாலும், ஓபன் பயோனிக்ஸ் நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட செயற்கை மற்றும் எலும்பு முறிவு நிபுணரான டேனியல் கிரீன், சிறுவனின் உடல் வளர்ச்சியும், உணர்வு ரீதியான வளர்ச்சியும் சிறப்பாக இருந்ததால் இந்தக் கைகள் அவருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தக் கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு கற்றுக் கொடுப்பது எளிதாக இருந்தது என்றார். 

இதன் மூலம் உலகிலேயே மிகச் சிறிய வயதில் பயோனிக் ஹீரோ ஆர்ம் பெறும் சிறப்பினை ஜோர்டன் பெற்றார். இதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹீரோ ஆர்ம் பயன்படுத்தினார்.  

ஜோர்டானின் தாய் ஆஷ்லே மரோட்டா, தன் மகன் இரு கைகளையும் பயன்படுத்தி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த ஹீரோ ஆர்ம் தன் மகனுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...