Skip to main content

Iron Man கைகளைப் பெறும் 5 வயது சிறுவன்... மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை!

நியூயார்க்கின் லாங் ஐலேண்டை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோர்டன் மரோட்டா. இந்தச் சிறுவன் பிறக்கும்போதே இடது கையின்றி பிறந்திருக்கிறார். 

இந்தநிலையில் சிறுவனுக்கு மூளையின் கட்டளைக்கு இணங்கி இயற்கையாகச் செயல்படும் வகையில் அயன் மேன் தீமில் (bionic Hero Arm) மருத்துவர்கள் கையைப் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் உலகில் சிறிய வயதில் `பயோனிக் ஹீரோ ஆர்ம்' பெறும் நபர் என்ற பெருமையை ஜோர்டன் பெற்றுள்ளார்.

Jordan - Bionic Hero Arm

சிறுவனுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் அயர்ன் மேன் என்பதால், இந்தக் கையை அப்படியே அச்சு அசலாக அயர்ன் மேன் திரைப்படத்தில் வரும் கைகளைப் போலவே சிவப்பு மற்றும் கோல்டன் நிறத்தில் வடிவமைத்துள்ளனர்.

சிறுவனின் இடது கை முடியும் இடத்திலிருந்து இந்தக் கை பொருத்தப்படுகிறது. கை தசைச் சுருக்கங்களைக் கண்டறிய மின்முனைகள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிதாக இந்தக் கையை இணைந்து பிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையை `நப்பி’ என்று குடும்பத்தினர் செல்லமாக அழைக்கின்றனர்.

இது பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை செயல்படும் என்று கூறுகின்றனர். பொதுவாகவே இந்த அட்வான்ஸ்டு செயற்கை கைகள் ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

இருந்தாலும், ஓபன் பயோனிக்ஸ் நிறுவனத்தில் சான்றளிக்கப்பட்ட செயற்கை மற்றும் எலும்பு முறிவு நிபுணரான டேனியல் கிரீன், சிறுவனின் உடல் வளர்ச்சியும், உணர்வு ரீதியான வளர்ச்சியும் சிறப்பாக இருந்ததால் இந்தக் கைகள் அவருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தக் கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு கற்றுக் கொடுப்பது எளிதாக இருந்தது என்றார். 

இதன் மூலம் உலகிலேயே மிகச் சிறிய வயதில் பயோனிக் ஹீரோ ஆர்ம் பெறும் சிறப்பினை ஜோர்டன் பெற்றார். இதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹீரோ ஆர்ம் பயன்படுத்தினார்.  

ஜோர்டானின் தாய் ஆஷ்லே மரோட்டா, தன் மகன் இரு கைகளையும் பயன்படுத்தி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்த ஹீரோ ஆர்ம் தன் மகனுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...